Pudukkottai

News August 5, 2024

அரிமளம் ஊராட்சியில் புதிய சமத்துவபுரத்துக்கு அடிக்கல்  

image

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில், ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டுவதற்கான பணியினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா ஆகியோர் அடிக்கல்நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

News August 5, 2024

 மாற்றுத்திறனாளி மாணவிக்கு புத்தகம் வழங்கல் 

image

புதுக்கோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சுகுணா புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்று வரும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்குவதற்காக ஸ்ட்ரெச்சர் மூலம் ஒவ்வொரு புத்தக ஸ்டாலுக்கும் சென்று தனக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கினார். மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த பலரும் மாற்றுத்திறனாளி மாணவி சுகுணாவிற்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினர்.

News August 5, 2024

 அரிமளம் அருகே பெண்கள் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு

image

 அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சியின் பகுதிகளை பிரித்து வேறு ஊராட்சியுடன் இணைக்க கூடாது என்று பெண்கள் போராட்டம் செய்தனர். மேலும் 204 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்க அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலார் பிகே. வைரமுத்து மற்றும்  பி.கே.வி.குமாரசாமி உடன் இருந்தனர்.

News August 5, 2024

திருமயம் கோட்டையில் அரசு பள்ளி மாணவர்கள்

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஆண்டிகுழப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள்  பார்வையிட்டனர . தலைமை ஞானசேகர் அகஸ்டின், உதவி தலைமையாசிரியர் ஆரோக்கிய நாதன் இல்லந்தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா ஆகியோர் மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர்.

News August 5, 2024

கந்தர்வகோட்டையில் மூளை நரம்பியல் சிகிச்சை சிறப்பு முகாம்

image

கந்தர்வகோட்டையில் மூளை நரம்பியல் சிகிச்சை சிறப்பு சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கந்தர்வ கோட்டையில் கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கம் , திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய பொதுமக்களுக்கான மூளை நரம்பியல் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

News August 5, 2024

அதிகாரிகளுக்கு புதிய பொலிரோ வாகனம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசுத்துறை அதிகாரிகள் புதிய வாகனங்களை பெற்றுக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு முறையாக வாகனங்கள் இல்லாததால் தங்களது பணிகளை செய்ய முடியாமல் இருந்து வந்த நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் புதிதாக 11 பொலிரோ வாகனங்கள் வழங்கப்பட்டன.

News August 5, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் செய்த உதவி 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு. அருணா, வழங்கினார். உடன், உடன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யாதேவி உடன் இருந்தனர்.

News August 5, 2024

புதுக்கோட்டையில் இன்றே கடைசி நாள்

image

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 நாட்களாக புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மாலை இறுதி நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா கலந்துகொள்கிறார். இன்றுடன் புத்தகத் திருவிழா நிறைவு பெறுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவில் சிறப்பிக்கின்றனர்.

News August 5, 2024

புதுக்கோட்டையில் ஓர் அதிசய கிராமம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வாடிமனைப்பட்டி கிராமம். பெயர் வாடிமனைப்பட்டி, ஆனால், “சைவ கிராமம்” என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள 45 குடும்பங்களும் வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்த கிராமத்தினர் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. திருமணங்களில் ஹோமங்கள், மந்திரங்கள் போன்ற சடங்குகளுக்கு இடமில்லை. SHARE IT

News August 5, 2024

நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை “மக்களுடன் முதல்வர் திட்டத்தின்” கீழ் குன்றாண்டார் கோவில் ஊராட்சி உடையாளிபட்டி, கொப்பம்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, உடையாளிப்பட்டி, ராவுத்தன்பட்டி, கில்லூகோட்டை ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!