Pudukkottai

News August 6, 2024

புதுக்கோட்டை அமைச்சர் அறிவிப்பு

image

கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையிலும், தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறந்தாங்கி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருக்கின்ற கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது என அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்துள்ளார்.

News August 5, 2024

 மாணவிகளை பாராட்டிய அமைச்சர் ரகுபதி

image

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று புத்தக திருவிழா நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பரதநாட்டியம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆடிய மாணவிகளை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

News August 5, 2024

புதுக்கோட்டை மாணவிகள் வயநாட்டிற்கு உதவி 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த அய்யப்பன் கோமதி தம்பதியினரின மகள், தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி பார்கவி கேரளா மாநிலம், வயநாட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10,000 ரொக்கமாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினார்

News August 5, 2024

அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கண்டனம்

image

அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தின் சில பகுதிகளை பிரித்து இராயபுரம் ஊராட்சியுடன் இணைத்திடும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் முற்றுகையிட சென்ற பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கிராம மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென சி.விஜயபாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

புத்தகத் திருவிழாவில் சட்டத்துறை அமைச்சர்

image

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 10-நாட்களாக நடைபெற்று வரும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிகழ்வு இன்று பத்தாவது நாளாக நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை 7 மணி அளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

News August 5, 2024

புத்தகத் திருவிழாவில் சிறப்புரையாற்றுகிறார் மாவட்ட ஆட்சியர்

image

மன்னர் கல்லூரி மைதானத்தில் ஏழாவது புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 05.08.2024 மாலை 06.30 மணியளவில், புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 7-வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார்.

News August 5, 2024

புதுக்கோட்டையில்  திடீர் ஆய்வு மேற்கொண்ட துணை மேயர்

image

புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 28 மார்த்தாண்டபுரம் மஹாராஜா பேக்கரி அருகில் உள்ள சந்தினை தூய்மைப்படுத்தும் நிகழ்வினை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி நேரில் சென்று பார்வையிட்டு பணி விவரங்களை கேட்டறிந்தார். 

News August 5, 2024

அரிமளத்தில் திமுக ஒன்றிய தலைவர் மேகலா முத்து

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை பாராட்டு விதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அறிமுகம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து கலந்து கொண்டு மக்களை தேடி மருத்துவத்தில் மக்களை தேடி சிறப்பாக சிகிச்சைகள் மேற்கொண்ட செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

News August 5, 2024

நிலுவைத்தொகை வேண்டி OHT ஆப்பரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு

image

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் OHT இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பிரதமரால் 5 -ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். 11.10.2017 முதல் 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்படும் குழு காப்பீடு திட்டம் கருவூலத்தில் பணத்தை செலுத்து ரசீது வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக OHT இயக்குபவர்கள் வழங்கினார்கள்.

News August 5, 2024

கிரிக்கெட் ஆடிய திமுக செயலாளர் செல்லபாண்டியன்

image

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்டவைகளை கொண்டாடும் விதத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே.செல்லபாண்டியன் கலந்து துவக்கி வைத்தார்

error: Content is protected !!