India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிரே தியாகராஜன் என்பவருடைய கடலை மில் பகுதியில் திடீரென பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட பாம்பை வனப்பகுதிகள் துறையினர் பத்திரமாக விட்டனர்.

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <

புதுகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

விராலிமலை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் பூரணம்மாள் (54). இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனை அடுத்து, அவரை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

புதுக்கோட்டை மாவட்ட கீரனூரைச் சேர்ந்தவர் சரவண குமார் (28). கூலி தொழிலாளியான இவர் 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

உலக மாற்றுத்திறனாளி தனத்தை முன்னிட்டு, புதுகை மாவட்டத்தில் நவ.21 மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 10 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் வண்ணம் தீட்டும் கோள் பயன்படுத்தியும், 11 முதல் 18 வயது வரை வாட்டர் வண்ணம் போட்டியும், 18 மேற்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் இன்று (நவ.14) நடைபெற்றது. உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.