India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (30.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாமலை சுனை லிங்கம் உள்ளிட்ட இந்த மலையில், பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்கு மேலமலைப் பகுதியில் இருக்கும் விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் ஒரு சுனை உள்ளது. அந்தச் சுனையினுள் ஒரு லிங்கம் இருப்பதாகவும், இதற்கு முன் அந்த லிங்கத்தை 1872ஆம் ஆண்டு, மக்கள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக விளங்குபவள் அன்னை பிரகதாம்பாள். திருகோகர்ணத்தில் உள்ள அன்னையின் தலத்திற்கு சென்று வழிபடாமல் அரச குடும்பத்தினர் எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். இந்த அம்மன் அரைக்காசு அம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். தமிழ்நாட்டில் வேறெங்கும் அரைக்காசு அம்மனுக்கு தனிக்கோயில் கிடையாது. மேலும் இங்கு வேண்டினால் தொலைந்த பொருட்களை மீட்டு தருவாள் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேல்வரை நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் முருகன். இவரது கல்வி சேவையை பாராட்டி திண்டுக்கல்லில் உள்ள லீலா கலை மற்றும் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கல்வி சுடர் விருது நேற்று வழங்கப்பட்டது. விருது ஆசிரியர் சேவையை பாராட்டி மாநில அளவில் ஜேஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்துகொண்டு உரையாற்றினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சா.மோகனசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த என்களுக்கு தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி இன்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்துகொண்டார். இதில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற விவசாயிகளுக்கு பரிசு தொகையினை வழங்கினார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின், கடைசி மன்னர் ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபால தொண்டைமான் ஆவார். தொண்டைமான் பரம்பரையின் 9ஆவது மன்னராக 6 வயதில் பிரிட்டிஷ் அரசால் 1928இல் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ராஜகோபால தொண்டைமான், 1928 முதல் 1948 வரை மன்னராக இருந்தார். 1948 மார்ச் 3ஆம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
அறந்தாங்கியிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில். இது, சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்கும். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.