Pondicherry

News August 16, 2025

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

image

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச்சில் இன்று (ஆக. 16) காலை குளித்த பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களான ஒரு பெண் உட்பட இரண்டு வாலிபர்கள் கடலில் குளித்த போது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 16, 2025

72ம் ஆண்டு செர்ரிகான் மாநாடு-முதல்வர் பங்கேற்பு

image

தமிழ்நாடு கண் மருத்துவ சங்கம் சார்பில், 72ம் ஆண்டு செர்ரிகான் மாநாடு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு, டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செர்ரிகான இயக்க செயலாளர் வனஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

News August 16, 2025

வாஜ்பாய் நினைவு தினம் -கவர்னரும், முதல்வரும் மரியாதை

image

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் (மேரி கட்டிடம்) அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு இன்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

News August 16, 2025

புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் இயக்குநராக சோமசேகர் அப்பாராவ் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை புதுச்சேரி சார்பு செயலாளர் கந்தன் என்கிற சிவராஜன் பிறப்பித்துள்ளார்.

News August 16, 2025

இல.கணேசன் மறைவு-புதுச்சேரி முதல்வர் இரங்கல்

image

முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆளுநர் இல கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. தனது வாழ்வின் பெரும் பகுதியைத் தேச நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் எளிய மக்களின் நல்வாழ்விற்காகவும் அர்ப்பணித்தவர். அவரது மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பாகும்.” என கூறியுள்ளார்.

News August 16, 2025

புதுவை: யூனியன் வங்கியில் வேலை-APPLY NOW!

image

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

புதுவை: தனியார் நிறுவன காவலாளி மர்ம இறப்பு!

image

துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல வேலைக்கு சென்றவர், காலையில் நாற்காலியில் அமர்ந்தபடி வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 16, 2025

கலால் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி கலால் துறை அலுவலகத்தில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை, அனைத்து உரிமதாரர்களும் சரியாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

News August 16, 2025

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து

image

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தேனீர் விருந்து அளித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இதனை தமிழகத்தை போல திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

News August 15, 2025

புதுச்சேரி: திருமண வாழ்க்கை சிறக்க இந்த கோயில் போங்க!

image

காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தான் இந்த அம்மையார் கோயில். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. சிவபெருமான் இவரை அம்மையே என்று அழைத்ததால், இவர் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்பட்டார். இந்த காரைக்கால் அம்மையாரை திருமணமான பெண்கள் இங்கு வழிபட்டால் அவர்களது திருமண வாழ்வு சிறந்து விளங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. SHARE செய்யவும்

error: Content is protected !!