India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். புதுச்சேரியில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
புதுவை, கோரிமேடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் சேதுராமன், மூலகுளம் தனியார் கல்லூரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் சேதுராமன், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இரவு 10:30 மணிக்கு மேல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் மின்துறை தனியார் மையத்தை கண்டித்து புதுடெல்லியில் வரும் 4,5 தேதிகளில் பேரணி கருத்தரங்கம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க புதுவை மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சிவக்குமார் கமிட்டி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இன்று ரயிலில் புது டெல்லி புறப்பட்டு சென்றனர். கருத்தரங்கில் புதுவை மாநில கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
புதுச்சேரி அரசின் அரசு துறைகளில் விடுமுறையில் சென்ற ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, அரசு துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கமால்பாஷா நேற்று (பிப்.28) வெளியிட்ட செய்தியில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், கடந்த 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை, சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், காப்பீடு திட்ட சிறப்பு முகாமை கால நீட்டிப்பு செய்யமாறு கேட்டுக்கொண்டனர். இதனால், மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுவை மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்ட உத்தரவை, அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார். அதில், “அரசுத்துறைகளில் முறைகேடான பணிநியமனங்களுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவினை பின்பற்றப்பட வேண்டும்” என்று ஆளுநர் கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘மாபெரும் சுகாதார திருவிழா’ சிறப்பு மருத்துவ முகாம், கண்காட்சி இன்று கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில், இன்று தொடங்கியது விழாவை சுகாதார திருவிழாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர்கள் தலைமைச் செயலர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது
சென்னையை சேர்ந்தவர் பிரவீன் இவருக்கு 17வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பாலியல் தொல்லை தந்துள்ளார். மேலும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். புகாரின் பேரில் பிரவீனை கைது செய்த முதலியார்பேட்டை போலீசார், அவர் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, பிரவீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
புதுச்சேரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘மாபெரும் சுகாதார திருவிழா’ சிறப்பு மருத்துவ முகாம், கண்காட்சி இன்று துவங்கி 3 நாட்காள் நடக்கிறது. கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில், இன்று (28ம் தேதி) சுகாதார திருவிழாவை கவர்னர் கைலாஷநாதன் துவங்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். ஆயுஷ் மற்றும் யோகா உடற்பயிற்சி முறைகள், ஆரோக்கிய உணவு திருவிழா போன்றவை இடம் பெற உள்ளன.
Sorry, no posts matched your criteria.