Pondicherry

News March 6, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆசை வார்த்தைகளை கூறி ஆன்லைன் ஷேர் மார்க்கெட் மற்றும் டிரேடிங்கில் அதிக லாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், மேலும் டிமேட் வங்கி கணக்கு இல்லாமல் டிரேடிங் செய்யும் முறையை முற்றிலும் நம்ப வேண்டாம் என்றும், SEBI ஆல் அங்கீகரிக்கப்படாத எந்த டிரேடிங் ஷேர் மார்க்கெட் போன்றவைகளை நம்ப வேண்டாம், என்றனர்

News March 6, 2025

புதுவை: 62 போலீசாருக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரி போலீசில் 10 ஆண்டுகள் பணி முடித்த 9 போலீசாருக்கு சிறப்பு நிலை தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணி முடித்த தலைமை காவலர்கள் 8 பேருக்கு சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவியும், 25 ஆண்டுகள் பணி முடித்த 45 பேருக்கு, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் நேற்று வெளியிட்டுள்ளார்.

News March 6, 2025

புதுவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சேவை மையம் சார்பில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் அலுவலகத்தில் மார்ச்.08 காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்கலந்துகொண்டு பயனடையலாம்.

News March 5, 2025

புதுவையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டண்சி சேவை மையமும் இணைந்து நடத்தும் அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் டாடா கன்சல்டண்சி நிறுவனத்தில் பிரஞ்சு ட்ரான்ஸ்லேடேர் (French Translator) நிரந்தர பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம 2 மணி வரை நடைபெறவுள்ளது.

News March 5, 2025

புதுச்சேரி அரசு பேருந்தில் போதை பொருள், நடத்துனர் சஸ்பெண்ட்

image

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த அரசு பேருந்தில் வேட்டவலம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெரிய பார்சல் இருந்தது அது குறித்து நடத்துனரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. அந்த பார்சலை பிரித்து பார்க்கையில் உள்ளே தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் இருந்தது. இதையடுத்து நடத்துனர் வெங்கடாசலபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 5, 2025

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலின் சிறப்பு

image

புதுவை ரயில் நிலையத்திற்கு 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மணக்குள விநாயகர் கோயில். மணல் குளத்து விநாயகர் என்ற பெயரே மருவி மணக்குள விநாயகர் ஆனது. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும் கோயில். இந்த கோயிலின் தங்கத் தேர் ஆண்டுதோறும் விஜயதசமியில் பவனி வருவது வழக்கம்.

News March 5, 2025

மாசிமகம்: புதுவை, காரைக்காலில் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை

image

மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமையும், புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் பொதுத்தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News March 4, 2025

புதுவையில் 4,000 பேருக்கு செவித் திறன் பாதிப்பு

image

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த சில ஆண்டுகளாகப் புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் செவித்திறன் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 39 ஆயிரம் பேர் பங்கேற்றதில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு செவித் திறன் பாதிப்பு (காது கேளாமை) இருப்பது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை குடுத்த இளைஞர் கைது

image

புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு வில்லியனூரைச் சேர்ந்த வினோத் குமார் (22) பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துவினோத் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2025

பாண்லே நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் வகைகள் அறிமுகம்

image

புதுச்சேரி அரசு, கூட்டுறவுத் துறையில் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக் கிளைகளின்‌ மூலம் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 70 மகளிருக்கு ரூ.83.50 இலட்சம் அளவிற்கு கடனுதவியையும் சிறந்த வங்கிக் கிளைகளுக்கு விருதுகளையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் இரண்டு புதிய ஐஸ்கிரீம் வகைகளை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

error: Content is protected !!