Pondicherry

News March 10, 2025

சட்டப்பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்

image

புதுச்சேரி அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்ற சட்டசபை வளாகத்திற்கு வந்த அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அவரை வரவேற்று சட்டசபையின் மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றார். ஆளுநர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றினார். தொடர்ந்து சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையை நாளை ஒத்திவைத்தார்.

News March 10, 2025

புதுவை ஆளுநரை வரவேற்ற சபாநாயகர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டப் பேரவையின் மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து தமிழில் உரையை வாசித்து வருகிறார்.

News March 10, 2025

புதுவை சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர்

image

புதுச்சேரி அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்ற சட்டசபை வளாகத்திற்கு வந்த அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அவரை வரவேற்று சட்டசபையின் மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் கைலாஷ்நாதன் அமர்ந்தார். ஆளுநர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றினார்.

News March 10, 2025

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதுவை முதல்வர் வாழ்த்து

image

புதுவை முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”12 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பையை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இது ஒரு தேசியப் பெருமை முழு உறுதியுடனும், திறமையுடனும் போட்டியை எதிர்கொண்டு நாடு முழுவதும் ஒரு வரலாற்று வெற்றியைத் தந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்

News March 9, 2025

எதிரிகளின் தொல்லை நீங்க அருள்புரியும் சரபேஸ்வரர்

image

கும்பகோணம்,திருபுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு அவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.Share It

News March 9, 2025

நாளை கூடும் புதுச்சேரி சட்டசபை 

image

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை திங்கள்கிழமை 9:30 மணிக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்குகிறது. வரும் 12ஆம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப திட்டமிட்டு உள்ளனர்.

News March 9, 2025

புதுவையில் நடக்கும் பாலியல் தொழில்

image

புதுவை அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில், “சமூக வலைத்தளங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் வெளிப்படையாகவே விளம்பரங்களை செய்கிறது. அதில், எந்த ஜோடிகள் வேண்டுமானாலும் எங்கள் எண்ணை தொடர்புகொண்டு, அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இது மாநிலத்தின் பெருமைக்கு மிகப்பெரும் தலைகுனிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

ஆன்லைனில் பகுதி நேர வேலை – 1.24 லட்சம் மோசடி

image

புதுச்சேரி சண்முகாபுரம் வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதை நம்பிய, கவிதா 1 லட்சத்து 24 ஆயிரத்து 991 ரூபாய் அனுப்பி, ஏமாந்தார். இதுகுறித்து நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விழிப்புடன் இருங்கள்..

News March 9, 2025

புதுச்சேரி: தீபாவளி சீட்டு மோசடி, எஸ்.ஐ சஸ்பெண்ட்

image

புதுவை, நெல்லித்தோப்பைச் சோ்ந்த ஜான்பியா்- பிலோமினா தம்பதியினர் தீபாவளி சீட்டு நடத்தி அந்தப் பணத்தை மீண்டும் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இருவரையும் முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு துணைநிலை ஆளுநர் மாளிகையில் வாகன ஓட்டுநராக பணியாற்றும் எஸ்.ஐ சிற்றரசன் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆகையால் எஸ்.ஐ சிற்றரசனை, காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

News March 8, 2025

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வர பகவான்

image

காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள சிவனின் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலய சனீஸ்வரன் புகழ்பெற்று விளங்குகிறார். நளன் என்னும் மன்னனை சனீஸ்வரர் துன்பப்படுத்தினார். அப்போது நளன் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். ஆகையால் இத்தலத்தில் வழிபட்டால் நம்மை பிடித்த சனி நீங்கும் என்பது ஐதிகம். உங்கள் சங்கடங்கள் தீர ஒருமுறை இத்தலத்திற்கு செல்லுங்கள்..

error: Content is protected !!