India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்தியில், இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக நடக்கிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் முன்பின் தெரியாதவர்களுக்கு சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், புத்தாண்டு என்பது தங்கள் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்வதற்கான நல்ல தொடக்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிற ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாக உள்ளது. பிறக்கும் இந்த விசுவாசுவ ஆண்டு, தமிழர்களின் வாழ்வில் ஏற்றமிகு வளர்ச்சியையும், குறைவில்லா வளத்தையும், நிறைவான மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும், என குறிப்பிட்டுள்ளார்.
புதுவை மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. GEN – 76, MBC -31, SC – 28 ,OBC -19, EWS – 17, BCM – 2, EBC -2, ST -1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 1, என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய <
இந்த தமிழ் புத்தாண்டு சிறக்க புதுவையில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள். புதுவை மணக்குள விநாயகர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், சுந்தரேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில், காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில், பஞ்சனதீஸ்வரர் கோயில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காரைக்கால் கைலாசநாதர் கோயில். SHARE செய்யவும்
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்த குடி என்ற பெருமை கொண்ட தமிழ் குடிமக்கள் தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்டவர்கள். தமிழ் மக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட எனது மனமார்த்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், என்றார்.
புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் புதுச்சேரியில் நீங்கள் செல்ல வேண்டிய 10 இடங்கள்: 1.பிரெஞ்சு தூதரகம், மரைன் ஸ்ட்ரீட், 2.லே ட்யூப்லெக்ஸ் லேன், 3.ராக் பீச், 4.பாரடைஸ் பீச், சுண்ணாம்பார் பேக்வாட்டர்ஸ், 5.ஆரோவில் மட்ரி கோயில் 6.பலைஸ் டி மாஹே, 7.ஸ்ரீ அரபிந்தோ ஆசிரம முற்றம், 8.சேம்பர் டி காமர்ஸ் பாரதி பார்க் விசினிட்டி 9. பழைய கலங்கரை விளக்கம் 10.காந்தி சிலை ஆகியவை ஆகும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். நாளை முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, எம்ஜி சாலை பகுதியில் அமைந்துள்ளது கன்னிகா பரமேஸ்வரி. இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். நவராத்திரி, பொங்கள், தீபாவளி போன்ற நாட்கள் இங்கு சிறப்பான நாட்களாகும். இங்கு வந்து வேண்டினால் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.