Pondicherry

News March 11, 2025

புதுவை: ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு 

image

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வருகின்ற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை முன்னிட்டு புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும், நோயாளிகள் அன்று வந்து சிரமப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 11, 2025

புதுச்சேரி கூட்டத்தொடரில் திமுக மற்றும் காங் வெளிநடப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவை 15வது சட்டப்பேரவை 6வது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. மேலும் ஃபெஞ்சல் புயலின் போது முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

News March 11, 2025

புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு

image

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW

News March 11, 2025

புதுவையில் போலீஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திவைப்பு

image

புதுவையில் புதிதாக தேர்வாகிய 27வது பேட்ஜ் போலீசாருக்கு, பயிற்சி நிறைவு அணிவகுப்பு, கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று (மா.10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி & உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் நேற்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதால் போலீசாருக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

News March 11, 2025

புதுவை பிரபல ரவுடி கொலை, போலீசார் விசாரணை

image

திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில், புதுச்சேரியை சேர்ந்த ஐயப்பன் நேற்று (மா.10) கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையத்தில் ஐயப்பன் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுச்சேரி போலீசாரின் கெடுபிடியால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 11, 2025

புதுவை: பிரபல ரவுடி வெட்டி படுகொலை

image

லாஸ்பேட்டையைச் சேர்ந்த சந்துரு மற்றும் ஐயங்குட்டிபாளையம் முத்துக்குமரன் ஆகியோருக்கு சூது விளையாட ஐயப்பன் பணம் கொடுத்ததாகவும் அதனை திருப்பி கேட்டு பணம் கொடுக்காததால் முத்துக்குமரன் சந்துரு ஆகியோரை கொலை செய்வதாக ஐயப்பன் மிரட்டியதாக தெரிகிறது. இதனால், முத்துக்குமரன் சந்துரு ஆகியோர் ஐயப்பனை கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.

News March 11, 2025

காரைக்கால் மீனவர்கள்அபராதம் கட்டினால் விடுதலை 

image

இலங்கையில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் ஜன – 28 ஆம் தேதி அன்று துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேருக்கு ரூபாய் 3.25 லட்சம்அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். மேலும் அபராதத்தை செலுத்தினால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News March 10, 2025

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்குமே் விடுமுறை

image

மாசி மகத்தை முன்னிட்டு வரும் மார்ச்-14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம்போல நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

புதுச்சேரியில் பட்ஜெட்டை ரூ.13,600 கோடிக்கு தாக்கல்

image

புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மேலும் நாளை மறுநாள் (மா.12) நிதிப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி அவர்களால் 2025 -26 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை ரூ 13,600 கோடிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இக்கூட்ட தொடரில் சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 10, 2025

மார்ச் 27 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் – சபாநாயகர்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் “பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.நாளை மறுநாள் (மா.12) முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மார்ச் 27ஆம் தேதி வரை உள்ள 14 அலுவல நாட்கள் சபை நடைபெறும். ரூ. 13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.

error: Content is protected !!