India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “போலி மருந்து விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு அவர் விலக தயாரா?.” என சவால் விடுத்தார். அப்போது டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.2) மாலை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்த்து மொத்தம் 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் அரசின் சார்பில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பொருட்கள் தொகுப்பு நாளை (ஜன.3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தியில், “பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதற்கான ஆணையை முதல்வர் பிறந்திருக்கும் 2026 புத்தாண்டின் பரிசாக அறிவிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.” என கோரியுள்ளார்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

புதுவை டி.வி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிகரன். இவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ரகசிய எண் அடுத்தடுத்து வந்துள்ளது. இதனை அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,45,583 பணத்தை சைபர் மோசடி கும்பல் திருடியுள்ளனர். இது குறித்து ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.” என கூறியுள்ளார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.