Pondicherry

News July 9, 2025

“இந்தியாவின் மொழி வளம் தனித்துவமானது” – ஆளுநர்

image

பாஷினி ஆப்’ அறிமுகம் மற்றும் துவக்கி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், “தொலைநோக்குப் பார்வை கொண்ட நம்முடைய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழி வளம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தனித்துவமானது. மொழி அடிப்படையிலான இடைவெளியை இந்த ஆப் குறைக்கிறது.” என்று தெரிவித்தார்

News July 9, 2025

புதுவையில் விவசாய கூலி தொழிலாளி தற்கொலை

image

கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மாயவன். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயன்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 9, 2025

புதுவை: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

image

புதுவை மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003895>>பாகம்-2<<>>)

News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News July 9, 2025

புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு போலீசார் குவிப்பு

image

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் INDIA கூட்டணி சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் முன்பு INDIA கூட்டணி மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News July 9, 2025

புதுவை: ஐ.டி.ஐ-யில் சேர்வதற்கான அறிவிப்பு

image

புதுவையில் 10ம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கான தொழிற் பிரிவுகளான, வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட பயிற்சி பிரிவுகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதனை அடுத்து, மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. மேலும் 9443958173, 9843856898 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE IT!

News July 9, 2025

மீனவர்களுக்கு மானியத்தில் படகு-கால அவகாசம் வழங்கல்

image

புதுச்சேரி பகுதியைச் சார்ந்த மீனவர்களுக்கு கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கும் திட்டத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 25ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மீனவர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

பாகூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

புதுச்சேரி, பாகூர் பகுதியில் அருள்மிகு வேதாம்பிகை சமேத மூலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. நாளை (ஜூலை 9) இந்த கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை பாகூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறையின் இணை இயக்குநர் சிவகாமி விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News July 8, 2025

புதுச்சேரி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

➡️ நெட்டப்பாக்கம் – பெ. இராசவேலு (8300218103)
➡️ கதிர்காமம் – எஸ். ரமேஷ் (7708512345)
➡️ மாகே – இரமேஷ் பரம்பத்து (9447360415)
➡️நெல்லித்தோப்பு – ரிச்சர்ட் ஜான்குமார் (9629992365)
➡️ முதலியார்பேட்டை – எல். சம்பத் (9443287521)
➡️ மணவெளி – ஏம்பலம்.செல்வம் (9843444799)
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!.

News July 8, 2025

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு

image

வில்லியனூரை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றார்.அவர் கடனை திரும்பி செலுத்திய பின்னரும் ஆன்லைன் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.மேலும் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்திலும் அவரின் உறவினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்து ரூபாய் 8,838 பெற்றனர் .அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்தனர்.

error: Content is protected !!