India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் 7ஆம் நாளான இன்று, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அவரவர் வீடுகளிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். முன்பெல்லாம் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் இனி, ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வந்தடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஹேப்பி நியூஸை SHARE பண்ணுங்க.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் சிவப்பு அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று இன்று மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சஷ்டி விழாவிற்கும், சூர சம்ஹாரத்திற்கும் புகழ்மிக்க கோயில் தான் இந்த சாரம் சுப்பிரமணியர் கோயில். இக்கோயில் சிறப்பே பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் தான். இங்கு முருகன் தன்னை நாடி வருபவர்களின் குறையை தீர்ப்பார். மேலும் சஷ்டி விரதம் இருந்து வழிபடுவோருக்கு திருமணத் தடை, மகப்பேறு போன்ற குறைகள் தீரும் என இங்கு வரும் பக்தர்களே உறுதி செய்கின்றனர். முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்
இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ் – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <
நேற்று சட்டசபையில் கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு புதுச்சேரியில் 24 கி.மீ., துாரம் உள்ள கடலோர பகுதிகளை பாதுகாக்க இ-ஷோர் திட்டத்தின்கீழ் ரூ. 1,000 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சேர்த்து தான் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு. மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் இன்று 18-3-25 இரவு 8 மணியளவில் கடந்த 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவு நிற்கின்றன.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற தேவையான மருந்துகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தினை அணுகி சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்து வருகின்றன. புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம்.தமிழ் நமது உணர்வு. நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், என உத்தரவிட்டார்.
புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வகுப்பு வாரியாக பொது-30, OBC -8, MBC -13, EBC -1, BCM -1, SC -12, ST -1, EWS -7, மாற்றுத் திறனாளிகள் -3 என மொத்தம் 73 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31 ஆகும். இதுகுறித்து மேலும் அறிய <
புதுச்சேரி சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்திற்குப் பிறகு சபாநாயகர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சபைக்கு அதிகாரிகள் வரவேண்டும். குறிப்பாக துறை இயக்குநர்கள் பேரவை நடக்கும்போது இங்கு இருக்கவேண்டும். செயலர்கள், இயக்குநர்கள் பதில் தரவேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகளை முதல்வர் கருணையுடன் பல முறை மன்னித்து விடுகிறார். இனி தண்டனை தரப்படும். இதுவே இறுதி எச்சரிக்கையாகும்”.
Sorry, no posts matched your criteria.