India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், “அரசின் இலவச அரிசியானது உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.வேறு யாரும் இதனால் ஆதாயம் அடையக் கூடாது என்ற நோக்கில் ஆதார் அடிப்படையில் அரசின் இலவச அரிசியானது வழங்க உத்தேசிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஊசுடு ஏரிபகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அருகில் காலை 8 மணி அளவில் மணல் ஏற்றி வந்த லாரி, அவ்வழியே தந்தையோடு பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவர்களின் மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் உயிரிழந்தனர். இதனால், அந்த மானவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை முத்திரையார்பாளையம் இளங்கோ அடிகள் அரசுப் பள்ளியில், ஆங்கில மொழி திறனை வலுப்படுத்த இனியா ஸ்ரீ என்ற பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த பேசும் பொம்மையில் ராஸ்பெர்ரி பை 3 போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோ போன் & இணைய வசதி பயன்படுத்தப்பட்டு, 5000 ஆங்கில வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
புதுவை எம்.ஜி.ஆர்.நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (ஜூலை 9) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 10) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் மூலக்குனம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், பாலாஜி நகர், ஜெயாநகர், ரெட்டி யார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படுமென கூறப்பட்டுள்ளது.
புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது.1940ம் ஆண்டு 2வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் புதுவை உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.1,30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <
புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ள சென்டாக், பி.ஆர்க் படிப்பிற்கும் விண்ணப்பம் வரவேற்றுள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் வரும் 11ம் தேதி வரை www.centacpucherry.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஜே.இ.இ., ஸ்கோருடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கிக் கணக்கில் வரும் பணத்திற்கு கமிஷன் தருவதாக யாராவது கேட்டால், அதனை நம்பி வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுடைய பெயரிலான வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவதால், மோசடியில் உங்களுக்கும் தொடர்பு உடையதாக கருதப்படும் என எச்சரிக்கை. SHARE IT
Sorry, no posts matched your criteria.