Pondicherry

News March 31, 2025

புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

image

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்ப உள்ளதாகவும், 04.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 31, 2025

இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி பெண் ஏமாற்றம்!

image

வில்லியனுாரைச் சேர்ந்த அக்ஷயா, இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் பகுதி நேர வேலைக்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அவர், 95 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாற்றம் அடைந்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 31, 2025

புதுச்சேரி ஆளுநர் ரமலான் வாழ்த்துச் செய்தி

image

புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ, உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது.ரமலான் நோன்பின் பயனாக அனைவரது வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் இறைவன் அருள் புரியட்டும் என புதுவையில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும அனைவருக்கும் ஆளுநர் மனமார்ந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

நவபாஷாண சித்தர் கோயிலில் திருவாசக முற்றோதல்

image

வில்லியனூரை அடுத்துள்ள சந்தி குப்பத்தில் அமைந்துள்ள சத்குரு நவபாஷாண சித்தர் ஆலயத்தில் சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியினை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் மருதமலை அப்பன் சிறப்பாக செய்திருந்தனர். முற்றோதல் நிகழ்ச்சி முடிந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

News March 30, 2025

புதுவை முதலமைச்சரின் ரமலான் வாழ்த்து செய்தி

image

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ரமலானின் மறைபொருளானது, நோன்புடன் தீவிர பக்தியில் ஈடுபடுவதையும், மனத்தூய்மை, பொறுமை, சுய ஒழுக்கத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோன்பின் பிரார்த்தனைகள், உங்கள் வாழ்வில் அன்பு, சகோதரத்துவம், ஈகை, வலிமை மற்றும் வளமான வாழ்வைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் எனது அன்பான ரமலான் நல்வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்

News March 30, 2025

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் ரம்ஜான் வாழ்த்து

image

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்ட செய்தியில், உலகில் வாழும் சரிபாதி மக்களின் விழாவான ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் புதுச்சேரி மாநில இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று கூறினார்.

News March 30, 2025

புதுவையில் காவலர்கள் திடீர் மாற்றம்

image

புதுவை காவல் தலைமையகத்தின் எஸ்.பி சுபம் கோஷ் வெளியிட்ட அறிவிப்பில், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும், வரதராஜன் போதை பொருட்கள் தடுப்பு பிரிவிற்கும், செந்தில்குமார் சிக்மா செக்யூரிட்டி, ஆடலரசன் ஏனாம் காவல் நிலையம், அனில்குமார் மாஹே காவல் நிலையம், சப் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல் ஒதியஞ்சாலை, பிரபு பாகூர் காவல் நிலையத்திற்கும் என இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

News March 30, 2025

சங்கடம் தீர்க்கும் மொரட்டாண்டி சனீஸ்வரர்

image

புதுச்சேரி அருகே கழுவெளி சித்தர் தவம் செய்த இடமான மொரட்டாண்டி எனும் கிராமத்தில், உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நவக்கிரக கோயிலில் 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வரன் சிலை உள்ளது. மேலும் அங்கு மற்ற நவக்கிரக சிலைகள் 15 அடி உயரம் இருக்கும். இங்குள்ள சனீஸ்வரரை வணங்கினால் வாழ்வின் துன்பங்களை நீங்கும் என்று கூறுகின்றனர். இதை பிறருக்கும் பகிரவும்

News March 30, 2025

யுகாதி வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் 

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் இந்த புத்தாண்டு தினம். நமது பாரம்பரிய, பண்பாட்டு அடையாளத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும், நிறைக்கட்டும். மேலும் புதுச்சேரியில் உள்ள தெலுங்கு மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்கள், என்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

புதுவையில் டாக்டரிடம் ரூ.48 லட்சம் மோசடி!

image

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். மருத்துவராக பணியாற்றி வரும் இவர், ஆன்லைன் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை தேடியுள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறியுள்ளனர். அதை கேட்டு ரூ. 48 லட்சம் அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!