India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ராசு உடையார் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாராயணன் (42). இவரது மனைவி வள்ளி மணக்குள விநாயகர் கோயில் அருகே பூக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், வள்ளி கடை அருகே அமுதா என்பவர் புதிதாக பூக்கடை வைத்துள்ளார். இதனால் அமுதாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமுதாவும், அவருக்கு ஆதரவாக சந்தியா என்பவரும் மரக்கட்டையால் நாராயணனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு ராஜினாமா கடிதத்துடன் கூடிய கோரிக்கை கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் இன்று (ஜூலை 9) வழங்கினார். மேலும் எம்எல்ஏ காலை முதல் சட்டசபையில் வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் அவருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ரமேஷ் உள்ளிட்டோர் முடித்து வைத்தனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்று வந்தது. அவ்வகையில் புதுடெல்லியில் கடந்த (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை MLA நேரு புதுவைக்கு தனது பதவியை இன்று (ஜூலை 9) ராஜினாமா செய்தார். மேலும் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் அவர் வழங்கினார்.
புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாஷினி ஆப்’ அறிமுகம் மற்றும் துவக்கி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், “தொலைநோக்குப் பார்வை கொண்ட நம்முடைய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழி வளம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தனித்துவமானது. மொழி அடிப்படையிலான இடைவெளியை இந்த ஆப் குறைக்கிறது.” என்று தெரிவித்தார்
கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மாயவன். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயன்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003895>>பாகம்-2<<>>)
▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் INDIA கூட்டணி சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் முன்பு INDIA கூட்டணி மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.