India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். இவரை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய சபரிநாதன் மா்ம நபா் கூறியபடி ரூ.2.35 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பி ஏமாந்தார். அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த 2024-25 கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்று துவங்கும் பள்ளிகள் வரும் 30ஆம் தேதிவரை இயங்கும். மே 1ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுவையை சேர்ந்த சபரிநாதன் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று நம்பி ரூ2,35,000 முதலீடு செய்தார். ஆனால் அது ஒரு போலியான பங்குச்சந்தை ஆகும். இதேபோல் புதுவையை சேர்ந்த அனுபமா ஜெயஸ்ரீயிடம் ரூ.12,397,விக்ரமிடம் ரூ10000 ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். கவனமாக இருக்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
புவனகிரியை சேர்ந்த உசேன் ஷெரிப் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியாங்குப்பம் வேலன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரம்ஜான் கொண்டாட புவனகிரிக்கு சென்ற அவரது மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியபடி மனைவியின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி, வங்கி விவரங்களை கேட்டுள்ளனர். இதனை நம்பி சரவணனும் மர்ம நபருக்கு வங்கி விவரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.11 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
சுற்றுலா நகரமான புதுச் சேரிக்கு, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக பிளஸ் 2 பொதுத்தேர்வு காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் ரமலான், யுகாதி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் முதல் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்ப உள்ளதாகவும், 04.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வில்லியனுாரைச் சேர்ந்த அக்ஷயா, இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் பகுதி நேர வேலைக்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அவர், 95 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாற்றம் அடைந்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ, உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது.ரமலான் நோன்பின் பயனாக அனைவரது வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் இறைவன் அருள் புரியட்டும் என புதுவையில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும அனைவருக்கும் ஆளுநர் மனமார்ந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.