India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேப்பந்தட்டையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சி, ஆலம்பாடி செல்லும் சாலையில் அன்னை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குழந்தைகளிடம் கல்வி, பாதுகாப்பு உள்ளிட பலவற்றை கேட்டறிந்தார்.
பெரம்பலூரில் வட்டார அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. கொக்கோ, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம், 121 ஊராட்சிகளில் உள்ள கிராம சேவை மையத்தில், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக செயல்பாட்டு குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 382 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் மலர் கொடி, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து 3500 ரூபாயை நிவாரண நிதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்களிடம் வழங்கினார். மலர் கொடியில் இந்த செயலை மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலர் மற்றும் சக அதிகாரிகள் பாராட்டினர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வேலூர் கிராமத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் எம்.பி.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ பிரபாகரன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களை காவல்துறையினர் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஒருவர் சாக்குப்பையுடன் வருவதை கண்டு காவல் துறையினர் சோதனை செய்ததில், சாக்குப்பையில் கத்தி இருந்தது தெரியவந்தது. பின்னர், அந்த நபரை இத்தகைய ஆயுதங்களுடன் இங்கு வரக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆதிதிராவிடா் வீட்டு வசதி,மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022 -2023, 2023 -2024 இல் +2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம். இதில் ரூ. 17,000 முதல் ரூ. 22,000 வரையிலும், பின்னா் ரூ.70,000 மாத ஊதியமாகப் பெறலாம். விவரங்களுக்கு 04328 – 276317 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.