India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் சென்னை, பெரம்பலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த டிஎஸ்பிக்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறையில் டிஎஸ்பியாக பணிபுரிந்த வல்லவன், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் எம்பி அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அன்னமங்கலம் சுற்றியுள்ள விஸ்வகுடி, முகமது பட்டணம் மற்றும் பிள்ளையார் பாளையம் ஊர் பொதுமக்களை சந்தித்து இன்று நன்றியை தெரிவித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மனு அளித்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் பலர் பங்கேற்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். பள்ளி சிறார்களுடன் உரையாடினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கு தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வேப்பந்தட்டை வாலிகண்டபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சக்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு நிலை மற்றும் தரம் குறித்தும், மின்னணு குடும்ப அட்டை மற்றும் கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தனையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஆக.23 ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பங்கேற்கலாம். 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்டம் மண்டல (ம) மாநில அளவில் நடைபெற உள்ளது இப்போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் ஆகஸ்ட் 25 ஆகும். www.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. என்.அருண் நேருவை பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.