Perambalur

News April 12, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள விவேஷியஸ் அகடாமி (ம) தாட்கோ இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி (ம) ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், ஆதிதிராவிடர் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 12, 2025

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற அழைப்பு

image

லால்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின், பெரம்பலூர் துணை பயிற்சி நிலையத்தில் 2024-25-ம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 17வயது பூர்த்தி அடைந்தவர்கள் சேர <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்ங்க

News April 12, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கி, பின்னர் 2 மணி நேரம் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் குடை பிடித்தபடியே சென்றனர். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News April 11, 2025

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச மையத்தை நாடி தீர்வு காணலாம்

image

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக நடந்த விழிப்புணர்வு முகாமில்  நேற்று மாலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக இருபதாம் ஆண்டு  நடைபெற்ற சமரசத்தீர்வு தினத்தில் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி சங்கர்  நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச மையத்தை நாடி தீர்வு காணலாம் விழிப்புணர்வு முகாமில் தலைமை குற்றவியல் நீதிபதி சங்கர் பேசினார்.

News April 11, 2025

சமையல்உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணபிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 15.04.2025 முதல் 29.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். Perambalur.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 11, 2025

பெரம்பலூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

சிறப்பு பொது விநியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடு–ளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (ஏப்.12) சத்திரமனை, பூலாம்பாடி, ஓதியம் மற்றும் அடைக்கம்பட்டி ஆகிய கிராமத்தில் நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்

image

செட்டிக்குளம் ஏகாம்பரஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு பங்குனி 19,20,21 தேதிகளில் சூரிய கதிர்கள் நேரடியாக ஏகாம்பரேஸ்வரர் மீது விழும். உட்பிராகத்தில் 10 தூண்கள் உள்ளன அதனை சந்தன குச்சியால் தட்டினால் 10 வகையான ஒலிகள் எழும். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்கினால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.

News April 10, 2025

பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

image

பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!