Perambalur

News April 15, 2025

கோடைகாலத்தில் குடும்பத்துடன் கொண்டாட சூப்பர் ஸ்பாட்

image

வேப்பந்தட்டை வட்டம் கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரம் மலை மீது அமைந்துள்ளது கோரையாறு அருவி. சுமார் 30 அடி உயரத்தில் மலை உச்சியிலிருந்து மூலிகை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது. தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏற்ற இடமாக இது உள்ளது. எனவே இந்த லீவுக்கு உங்க குடும்பத்தோடு போயிட்டு வாங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 15, 2025

பெரம்பலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Retail Sales Associate பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 15, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிராமங்களில் தங்கி ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நாளை (ஏப்.16) நடைபெறவுள்ளது. அதன்படி வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தும் மனுக்களை பெறவுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

News April 14, 2025

பெரம்பலூர்: செல்வம் அருளும் ஏகாம்படேஸ்வரர் கோயில்

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் எனும் ஊரில் ஏகாம்படேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள குபேரரை வணங்குவோர்க்கு வாழ்வில் அனைத்து வகையான செல்வம் செழித்து மன அமைதியுடன் வாழலாம் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்

News April 14, 2025

பெரம்பலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News April 14, 2025

புத்தாண்டில் இங்கு சென்று வழிபடுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், சிறுவாச்சூர் மதுராகாளியம்மன் கோயில், அத்தியூர் வடமலை ஈஸ்வரர் கோயில், அந்துர் சிவலோகநாத சுவாமி கோயில், மதனகோபால சுவாமி கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 13, 2025

பெரம்பலூர்: வடமலைஈஸ்வரர் கோயில்

image

பெரம்பலூர், அத்தியூரில் புகழ்பெற்ற வடமலைஈஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

பெரம்பலூர்: சிறுமியை கடித்து குதறிய நாய்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரலி கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி புவனேஸ்வரி(14). விடுமுறை என்பதால் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, புவனேஸ்வரியை கடித்துக் குதறியது. இதில், படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Retail Sales Associate பணியிடங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 12, 2025

பெரம்பலூர்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!