India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சிவாலாயத்தில் 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்க!
பெரம்பலூர் மாவட்டம்,லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் – பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர்,தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது,பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
11,12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மே 9,10 தேதியில் நடைபெறுகிறது,போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tamilvalarchithurai.in.gov.inபதிவிறக்கம் செய்து பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் முதல்வரிடமும் பரிந்துரைக்கடிதத்துடனும் 05.05.2025 நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ <
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <
பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஏப்.25) காலை 10 மணிக்கு நடக்கிறது முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்,10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் முகாமில் கலந்து கொள்ளலாம்.SHAREIT
பெரம்பலூர் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் இவர் 10 வருடமாக ஆடு வளர்ப்பு செய்து வருகிறார்,இவரின் ஆடுகளில் ஒன்று குட்டியிட்டபோது ஆட்டுக்குட்டி மனித உருவ தலை தோற்றத்திலும் வாயில் கண்களுடன் பிறந்தது,மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர்,பிறந்த 30 நிமிடங்களில் மனித உருவ ஆட்டுக்குட்டி உயிரிழந்தது ஆச்சிரியத்துடன் கண்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் சேக் அப்துல்லா என்பவர் தனது சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றது தெரியவந்தது. அவரை இன்று போலீசார் கைது செய்து அவரிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.