Perambalur

News October 15, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 19.10.2024 அன்று களரம்பட்டி கிராமத்திலும், வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்திலு, குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்திலும், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் (தெற்கு) கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை, பொருள்கள் பெறும் நியாய விலை கடையில் உள்ள விற்பனை இயந்திரத்தின் மூலம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காசோளம் பயிருக்கு பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 16.10.2024 ஆகும். விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயனடைய வேண்டும் என கலெக்டர் இன்று தகவல்.

News October 14, 2024

பெரம்பலூர்: 4.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.4. 21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 14, 2024

பெரம்பலூர் மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) மற்றும் அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

30 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் டிவிஎஸ் ஷோரூம் எதிரில் புங்க மரத்தில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இன்று
காலை தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சித்த போது சாலையில் நடந்து சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இளைஞரை காப்பாற்ற முயற்சித்த போது இளைஞர் இறந்துவிட்டார். இறந்தவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு இலவச பயிற்சி

image

பெரம்பலூர், செங்குணம் பிரிவு சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தில் வெண்பன்றி வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி வரும் அக்.17ஆம் தேதி நடைபெற இருப்பதால், இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கால்நடைத்துறை பயிற்சி மையத்தை நேரில் அணுகவும் அல்லது 9385307022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 13, 2024

பெரம்பலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 120 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000க்கும் மேல் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமினை தகுதியுடையோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 13, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.ஷேர் பண்ணுங்க

News October 13, 2024

பெரம்பலூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 120 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000க்கும் மேல் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமினை தகுதியுடையோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!