Perambalur

News October 5, 2024

TNPSC குருப்2, 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் TNPSC Group 2, 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 7/10/24 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். இவ்வகுப்பானது அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும் என்றும், படித்த வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 31.12.2024 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் (www.tamilvalar chithurai.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் நிறைவு செய்த விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் 31.10.2024 அளிக்கப்பட வேண்டும் என கலெக்டர் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

லட்சத்தீவு அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்று பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 7:30 மணி வரை கனமழை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

பெரம்பலூர் அருகே கொலை வழக்கில் ஆஜராகாத வாலிபர் கைது

image

ஆலத்தூர் வட்டம் எலந்தலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வேலவன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெரம்பலூர் ஸ்பெஷல் டீம் உதவியாளர் பார்த்திபன் பழனிவேலு தலைமையில் காவலர்கள் தயாளன் ஆகியோர் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

News October 3, 2024

பெரம்பலூர்: கர்ப்பப்பையில் இருந்து 5 கிலோ கட்டியை அகற்றி சாதனை

image

பெரம்பலூர் வட்டம், அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி செந்தமிழ்செல்வி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலுார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது பரிசோதனையில் செந்தமிழ்செல்விக்கு கர்ப்பப்பையில் 5 கிலோ கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றி சாதனை படைத்தனர்.

News October 2, 2024

பெரம்பலூரில் கஞ்சா விற்பனை இளைஞர்கள் கைது

image

பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இளஞ்சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விக்னேஷ் முகுந்தன் ஆகிய இரண்டு நபரையும் கைது செய்து Cr.No.194/24 U/S 20(b) (ii) (A) 77 JJ NDDS Act யின் படி வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூபாய்.500 மதிப்புள்ள 50 கிராம் உள்ள 10 கஞ்சா பொட்டலங்கள் ரூபாய் 600 பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News October 2, 2024

கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

image

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02.10.2024) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆலம்பாடி ஊராட்சியில் செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார்.

News October 2, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ராபி சிறப்பு பருவத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காய பயிருக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் சின்ன வெங்காய பயிருக்கு 30.11.2024 அன்றுக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 8 பேர் படுகாயம்

image

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பெரம்பலூர், முருகன்குடி அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியதில் 8 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!