India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் 3-ஆம் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அரசின் 15 துறைகளில் வழங்கப்படும் 44 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், அலுவலகக் கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம். பி. அருண்நேரு, பெரம்பலூர் எம். எல். ஏ பிரபாகரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா். முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்க கூடிய சாலையோர கடைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து ஆட்சியர் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கிராமசபை மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிந்து, அரசு நலத் திட்டங்களை வழங்க வேண்டும். அரசு நிா்வாகத்தின் உள்ள நிர்வாகத்தின் மக்களிடையே கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று (ஜன.24) நடைபெற்றது. இதில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். ஹெல்மெட் போடுங்க பரிச வாங்குங்க
மனிதநேய வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி இன்று (24.01.2025 ) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியை (24-01-2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு வெவ்வேறு மாரியம்மன் கோயில்களிலும் மற்றும் புது அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தற்போது பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர்களுக்கு ஜன.29-ம் தேதியும், மருந்தாளுநர்களுக்கு பிப்.4-ம் தேதியும் ஆட்சேர்ப்பு முகாம் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தை அனுகலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.