India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை முடிந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு எந்த ஒரு பேருந்து இடையூர் இல்லாமல் இருப்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பேருந்தில் பயணிக்கும் பயனாளிகளில் குறைகளை கேட்டறிந்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மங்களமேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரஞ்சன்குடி, பெருமத்தூர், தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், பிம்பலூர், மறவநத்தம், தைகால், ஆடுதுறை, ஒகளூர், வேப்பூர், நன்னை, பரவாய் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.4) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அரசாங்கத்தால் மது விற்பனை டாஸ்மாக் நடைபெற்று வருகிறது. இதில் பண்டிகை காலங்களில் அதிகப்படியான மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் (31-10-2024) தீபாவளியன்று ரூ.5 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 850 ரூபாய்க்கு மது விற்பனை விற்பனை நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 5.11.2024 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி ஐஸ்வர்யா (21) இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், ஐஸ்வர்யா வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வரதட்சனை கொடுமை ஏதும் உள்ளதா என சப் கலெக்டரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
க.எறையூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (29) நேற்று முன்தினம் மாலை பாடலூரிலிருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி பைக்கில்சென்றார். அந்த பைக் தனியார் மண்டபம் அருகே சென்றபோது எதிர் திசையில் சென்னையில் இருந்து திருச்செந்தூரை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் கல்யாண நகர் பகுதியில் ஹேமலதா மற்றும் அவரது மகள் அபிநயா இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் ஹேமலதாவின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து ஹேமலதா, அபிநயாவையும் கை கால்களை கட்டி போட்டு அவர்கள் அணிந்திருந்த 5 பவுன் செயின், ரூ.2 லட்ச ரொக்கப் பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 32 கடைகளில் மது விற்பனை இரண்டு கோடியே 17 லட்சத்தி 74 ஆயிரத்து 336 ரூபாயாக விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கடைகள் குறைந்த நிலையிலும் விற்பனை அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சொந்த ஊர் சென்றோர் எளிதாக சென்னை ள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 2000திற்கும்மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளான இன்று 28 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.