Perambalur

News November 7, 2024

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

image

பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

News November 7, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 9.11.2024 அன்று நடைபெற உள்ளது. பெரம்பலூர் வட்டம் கல்பாடி கிராமம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமம், குன்னம் வட்டம் பேரளி கிராமம், ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

News November 7, 2024

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு போட்டி தேர்வு 

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடைநிலை பட்டய கணக்காளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர், நிறுவன செயலாளர் ஆகிய போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தகுதியுடைய போட்டியாளர்கள் பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையத்தில் பதிவேற்றம் செய்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறது.

News November 7, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் மாபெரும் இளைஞர் திறன் திருவிழா பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 8.11.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் தகுதி உள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94440 94136, 04328-225362 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல்

News November 7, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில்
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, இடைநிலை பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர், செலவு (ம) மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்

News November 6, 2024

பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம் 

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை (ம) சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 18 வயதிற்கு குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 55 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்தனர்.

News November 6, 2024

சிறப்பு மனு முகாமில் 44 மனுக்கள் பெறப்பட்டன

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த மனு முகாமில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 44 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

News November 6, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையில் வைக்கப்பட்டுள்ள போதையில்லா பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகையில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா நேற்று போதை ‘எனக்கு வேண்டாம்’ நமக்கும் வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News November 6, 2024

தவெகவில் இணைந்த பிற கட்சி உறுப்பினர்கள்.

image

பெரம்பலூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் 50க்கும் மேற்பட்ட பிற கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், தமிழக வெற்றிக்கழக பெரம்பலூர் மாவட்ட தொண்டரணி மாவட்ட தலைவர் கருணா தலைமையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இன்னும் சில தினங்களில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலரும் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

செங்கனம் அருகே விபத்தில் இளைஞர் பலி

image

பெரம்பலூர் வட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்குணம் கைகாட்டி தென். பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு ஒருவர் கிழக்கில் இருந்து மேற்காக சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணையில் இறந்தவர் வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் (37() என்பது தெரியவந்தது.

error: Content is protected !!