Perambalur

News April 18, 2025

பெரம்பலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

பெரம்பலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட பேரிடர் உதவி மையம் – 1077
▶️பொது விநியோக திட்டம் – 1967
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பாலியல் வன்கொடுமை – 181
▶️விபத்து உதவி மையம் – 1073
▶️டெங்கு காய்ச்சல் உதவி எண் – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News April 18, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கிடைத்த மத்திய அரசு சான்று

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாகம் சான்றிதழ்களும், 5 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளிகள் என சான்றிதழ்களும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளர்கள் கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News April 17, 2025

பெரம்பலூர்: வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

பெரம்பலூர்: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய tnpsc.gov.in என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்.

News April 17, 2025

பெரம்பலூர்: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 அங்கன்வாடி மையம் மற்றும் 5 நடுநிலைப் பள்ளிகளுக்கு (ICDS) சரியான உணவு உண்ணும் வளாகம் ,அற்று, பள்ளிஎன்ற சாண்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் மூலம்  வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

News April 17, 2025

பெரம்பலூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 17, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 01.05.2025 முதல் செயல்படவுள்ள SDAT -ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிக்கு, ஆர்வமுடைய வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இம்மையத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கான தேர்வு 28.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News April 17, 2025

மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.10,000-கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேய மிக்கவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.5 ஆயிரத்துடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News April 17, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக, வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் நடைபெற உள்ளதென மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

பெரம்பலூர்: கோடை காலத்தில் மக்கள் செய்யக்கூடாதவை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, பொதுமக்கள் கோடை காலத்தில் எவையெல்லாம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், டீ, காபி, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் எனவும், மற்றும் வெற்றுக்காலுடன் வெயிலில் நடக்க வேண்டாம், . மேலும் முக்கியமாக குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!