India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் இதற்கு APPLY பண்ணலாம். இதற்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது விண்ணப்பத்தினை 10.10.2025–க்குள் இசேவை மையங்களின் மூலமாக அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (செப்.13) முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி இன்று (செப்.13) மாலை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. மிருணாளினி தலைமையில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.
SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகம் திட்டம் சார்ந்த குறைபாடுகளை தெரிவிப்பதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண பொது விநியோகம் திட்ட குறைதீர் முகாம் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் நாளை (13-09-2025) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.
செட்டிகுளம் கடை வீதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (19). இவர் தற்போது பாடாலூரில் வாடகை வீட்டில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீசன், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெகதீசனை நேற்று கைது செய்தனர்.
பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ள அறிய வாய்ப்பாக வரும் செப்.13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு சட்டப்பணி ஆணை குழுவை நேரிலோ அல்லது 04328- 296206/ 04328-291252 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW…
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறையைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் குளிப்பதற்காக அவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் அந்தோணியின் உடலை மீட்டனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஜெர்மன் மொழி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. கலந்து கொள்பவர்கள் 21 வயது முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனம் சார்பாகவே ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு தரப்படும் எனவும் விவரத்திற்கு 04328 276317 எண்ணை அழைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.