India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு கரையை கடந்து, தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கமெண்ட் பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா போட்டிகள் 05.12.2024 அன்று தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க dyc.perambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 04.12.2024 மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும். மேலும் தகவல்களுக்கு 7810982528, 04328-296213 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதி உள்ளவர்கள், தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு டிச.20க்குள் அனுப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தகுதி உள்ளவர்கள், தங்களது விண்ணப்பம், சுயவிவரம், தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் வடக்கு கிராமத்தில் டிச.11ஆம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. துங்கபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை துங்கபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் கீழக்கரை கிராமத்தை வேணுகோபால் மகன் நல்லுசாமி இருவரும் மாட்டிற்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வேணுகோபாலை கட்டு விரியன் பாம்பு கடித்துள்ளது. கடித்த பாம்பை அடித்து எடுத்துக் கொண்டு நல்லுசாமி தந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிகிச்சையின் போது வேணுகோபால் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் பெரம்பலூரில் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்’ 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு தகுதியுடையவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம் அரசு வாகனத்தில் ஸ்கார்பியோ காரில் தனது சொந்த ஊரான நுத்தப்பூரில் இருந்து ஓட்டி வந்த போது வேப்பந்தட்டை வெண்பாவூர் பாரஸ்ட் வளைவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சேர்மன் ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் காலை முதல், இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சீதோஷண நிலை மாறி தற்போது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம், பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருதும், ரூ.1,50,000 மதிப்புள்ள காசோலையும் வருடம்தோறும் முதலமைச்சரால் வழங்கப்படும். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஒளவையார் விருது பெற தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.