Perambalur

News March 30, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல் குளத்தில் ‘நீந்த கற்றுக்கொள்’ என்ற திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டிற்கான சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கான கட்டணமாக ரூ.1,500 மற்றும் 18 சதவீதம் GST நிர்னயக்கப்பட்டுள்ளது, இந்த நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கத் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழு தகவல்களை <>www.tnlda.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களையும் அணுகலாமென பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News March 29, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளமாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 31.03.2025 வரை செல்லத்தக்கதாக பண்படுத்தலாம் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்கள் 30.06.2025 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

பெரம்பலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 29, 2025

+2 முடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், +2 முடித்த மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் “என் கல்லூரி கனவு” என்னும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (29.03.2025) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த +2 முடித்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கூறியுள்ளார்

News March 28, 2025

பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

image

”நீந்தக் கற்றுக்கொள்” திட்டத்தின் மூலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. பயிற்சி கட்டண விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்,மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட அலுவலகம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

News March 28, 2025

வரலாறு புதைந்து கிடக்கும் பசு-உரையும்-கல்

image

நாடு விடுதலை அடைந்ததின் நினைவாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-ன் மகன் ஆறுமுகம் பிள்ளையால் பசும்பலூர் பேருந்து நிலையத்தில் நடப்பட்டுள்ள பசு-உரையும்-கல் இன்றும் உள்ளது. இக்கற்கள் ஆவுரிஞ்சிக் கல், பசு-உரையும்-கல் என அழைக்கப்படுகிறது. இவை பெரம்பலூர், சிறுவாச்சூர், பொம்மனப்பாடி பகுதிகளிலும் காணப்படுகிறது. உங்க ஊர் பெருமையை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க இது குறித்த கருத்தை COMMENT பண்ணுங்க…

News March 28, 2025

மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 98 – 102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 28, 2025

அதிகாரிகளுக்கு 2 வாரம் கெடு கொடுத்த கலெக்டர்!

image

பெரம்பலூர் மாவட்ட சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், “கோர்ட்டு உத்தரவின்படி பொது இடங்களில் அனுமதியில்லாமல், நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

News March 27, 2025

பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் (19) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அப்துல்கலாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

error: Content is protected !!