Perambalur

News September 12, 2025

பெரம்பலூர்: இலவச ஜெர்மன் மொழி பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஜெர்மன் மொழி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. கலந்து கொள்பவர்கள் 21 வயது முதல் 35 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனம் சார்பாகவே ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு தரப்படும் எனவும் விவரத்திற்கு 04328 276317 எண்ணை அழைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

பெரம்பலூர்: விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கல்

image

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் செப்.,13-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், பின்பு பிரச்சாரத்தை துறையூர் சாலை மேற்கு வானொலி திடல் பகுதியில் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

News September 11, 2025

சிறுபான்மையினருக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், சிறுபான்மையின மக்களின் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறியவும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜோ.அருண் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 141 பயனாளிகளுக்கு ரூ.20.54 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News September 11, 2025

முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்

image

இன்று (11.09.2025) பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை மற்றும் பென்னகோணம் ஊராட்சி களுக்கு திருமாந்துறை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடைன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் திடீரென போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.

News September 11, 2025

பெரம்பலூர்: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

பெரம்பலுர்: ரூ.78,450 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான 120 அதிகாரிகளுக்கான (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.78,450 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

பெரம்பலூர்: பயணியர் நிழற்குடையினை திறந்த அமைச்சர்

image

பெரம்பலூர் (செப்டம்பர் 11) போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாடபுரம் மற்றும் மேலப்புலியூர் பகுதிகளில் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

News September 11, 2025

பெரம்பலூர்: சிறுபான்மையினர் ஆய்வு கூட்டம்

image

பெரம்பலூர், மாவட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின தலைவர், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

News September 11, 2025

பெரம்பலூர்: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டா? Call Now

image

பெரம்பலூர்மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல் !

image

பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையினருக்கான கல்வி பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை இனத்தை சார்ந்த பொது மக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினரை இன்று (செப் 11) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து தங்கள் குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை குறித்தும் சிறுபான்மையினரின் நல மேம்பாட்டிற்காக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!