Perambalur

News January 21, 2025

வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, வேப்பூர் அரசு மருத்துவமனையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (21.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது, துறைசார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News January 21, 2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்: மக்களுக்கு அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நாளை (ஜன.22) நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் வாயிலாக நாளை மனுக்கள் பெறப்பட உள்ளது. குன்னம் சுற்றியுள்ள அனைத்து அலுவலகங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்.

News January 21, 2025

ஆவின் விற்பனையகம் அமைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையகம் அமைக்க தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கலெக்டர் கிரேஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ரூ.55 ஆயிரம் வழங்கப்படுகிறது. பயன்பெற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழுடன் அணுகவும்.

News January 21, 2025

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு இளம் வல்லுனர் வேலைவாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை சேகரித்தல் மற்றும் கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற கணினி, அறிவியல் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தொகுப்பூதியமாக ரூ.50,000 வழங்கப்படும் எனவும், தகுதியுடையவர்கள் http//:perambalur nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். 

News January 21, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, சின்னார், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், பூலாம்பாடி, பெரியவடகரை, பெருமாத்தூர், அத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஒரு நபருக்கு ரூ.50000 நிதி உதவி வழங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 27.1.25 தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

பெரம்பலூர்: 75 வயது பாட்டிக்கு 30 வயது என ஆதார்

image

பெரம்பலூர் சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி தெய்வானை (வயது 75). இவர் இன்று (ஜனவரி 20) தனது தள்ளாடும் வயதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அதில் தனக்கு 75 வயது ஆகிறது என்றும், ஆனால் ஆதார் அட்டையில் 1994 ஆம் ஆண்டு இருப்பதால் தனக்கு 30 வயதாக உள்ளது என்று ஓய்வூதிய உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

News January 20, 2025

பெரம்பலூர் : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (20.01.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். இந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 20, 2025

பெரம்பலூர்: நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்ப்பட்ட சிறுவாச்சூர், குரூர், எசனை, கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share Now..

News January 19, 2025

குன்னத்தில் இலவச கலைஞர் கணினி பயிற்சி மையம் திறப்பு

image

குன்னம் தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கான, “கலைஞர் கணினி பயிற்சி மையத்தை” கழக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா இன்று (ஜன-19) குன்னத்தில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ். எஸ்.சிவசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!