Perambalur

News August 5, 2025

பெரம்பலூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

மருந்து கடை முன்பு இறந்து கிடந்த வாலிபர்

image

பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு மருந்துக் கடை முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 5, 2025

போக்சோ வழக்கில் இளைஞருக்கு கடுங்காவல் சிறை

image

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை குழந்தை திருமணம், கற்பழிப்பு செய்ததாக அஜித் (22) என்பவரை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ (ம) குழந்தை திருமண வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அஜித்துக்கு 42 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை (ம) 1,50,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது

News August 5, 2025

பெரம்பலூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசிடம் வேலை!

image

பெரம்பலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 126 காலிபணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 5, 2025

பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

image

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <>இந்த லிங்கிள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம்<<>> செய்து, 11.08.2025 தேதிக்குக்குள் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News August 4, 2025

பெரம்பலூர்: மாதம் சம்பளம் 1 லட்சம்! உடனே APPLY பண்ணுங்க

image

பெரம்பலூரில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்காம். ஆக.,17ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்!

News August 4, 2025

பெரம்பலூர்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

பெரம்பலூர் மக்களே கேஸ் சிலிண்டரை Booking செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை ஈசியாக Book பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க.

News August 4, 2025

பெரம்பலூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! (மேலும் தகவலுக்கு <<17032185>>பாகம் 2<<>>)

News August 4, 2025

பெரம்பலூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

News July 11, 2025

பெரம்பலூர் வருகை தரும் பிரதமர் மோடி

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்னதாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!