India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இறவை மக்காச்சோளம் பயிரை பயிர் காப்பீடு செய்யலாம். இந்த பயிர் காப்பீடு செய்வதற்கு பீரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.345 ஆகும். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இறவை மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஜன.31-ந்தேதியே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
இந்தியத்திருநாட்டின் குடியரசு நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் ஸ்ரீமதன கோபால சுவாமி திருக்கோவிலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தும் சம்பந்தி விருந்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பங்கேற்று அனைவருடனும் உணவு சாப்பிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரியில் நேற்று (ஜனவரி 25) மாலை தேசிய வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. வாக்காளர் உறுதிமொழி நிகழ்வை கல்லூரியின் வேந்தர் சீனிவாசன் தொடக்கி வைத்தார். கல்லூரியின் மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு (VOTE) என்ற வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழியை ஏற்றனர்.
நொச்சிக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை நடத்தவிடாமல் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் பூட்டிவிட்டு, ஊராட்சி செயலர் பானுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், பராமரிப்பு பணிகளில் ரூ.78,000 கையாடல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 26-01-2025 குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்னர் தமிழ்ச் செம்மல் விருதாளர்களுக்கு சிறப்பு செய்தார். தமிழ்ச் செம்மல் மாயகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் சால்வை அணிவித்தும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் கடந்த 8-01-25 அன்று சிறந்த ஜூனியர்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடைபெற்றது. வரும் 29-01-2025 அன்று மாவட்ட கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, முதன்மைக்கல்வி அலுவலர் முருகம்மாள் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளனர். நிகழ்வில் சிறந்த ஜே ஆர் சி பள்ளி, கவுன்சிலர், ஜூனியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் 3-ஆம் கட்டமாக வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அரசின் 15 துறைகளில் வழங்கப்படும் 44 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், அலுவலகக் கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம். பி. அருண்நேரு, பெரம்பலூர் எம். எல். ஏ பிரபாகரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா். முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்க கூடிய சாலையோர கடைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து ஆட்சியர் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கிராமசபை மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிந்து, அரசு நலத் திட்டங்களை வழங்க வேண்டும். அரசு நிா்வாகத்தின் உள்ள நிர்வாகத்தின் மக்களிடையே கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.