India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூரில் நடைபெற்று வரும் ஒன்பதாம் ஆண்டு புத்தகப் திருவிழாவில் (பிப்.8) நேற்று பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் பேச்சாளராக மக்கள் மேடையில் பேசினார். 31.1.2025 தொடங்கிய புத்தகத் திருவிழாவில் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்று தீர்ந்தன. பெரம்பலூர் மக்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியில் இன்று இறுதி நாளை எட்டியுள்ளது, இன்றுடன் முடிவடைகிறது.
பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சங்குபேட்டையை சேர்ந்த 19 வயது இளைஞன் விசாரித்ததில் இளம் சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகாவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கட்டமாகவும், பிப்ரவரி 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாக விடுபட்ட குழந்தைகளுக்கு நடைபெற உள்ளது. 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த, வேலை இல்லாதோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு உதவி தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து வரும் பிப். 28ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான வருகிற 11ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும், என்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது, சிறப்பு சிறார் காவல் திட்டத்தில் 2 சமூகப் பணியாளர் மற்றும் 1 உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ஆகிய தற்காலிக பணியிடங்களை நிரப்ப வரும் பிப்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தை <
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (63) என்பவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்ததனால், மனமுடைந்த பெரியசாமி கடந்த 3-ஆம் தேதி தனது வயலுக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ள நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சித்திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழாவின் 8-ம் நாளான நாளை (07.02.2025) எழுத்தாளர்.நாஞ்சில் நாடன் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் “பெயரில் என்ன இல்லை” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் ‘சுளுநீதி’ இரா.முத்துநாகு “தமிழர் அறிவியலான சித்த மருத்துவம்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல்.
பெரம்பலூர் நகராட்சி திடலில் தொடங்கப்பட்ட 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை 5.2.2025 வரை 27,825 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பார்வையிட்டுள்ளனர் என நகராட்சி நிர்வாகம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று (பிப்.05) வரை ரூ.19.9 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.