India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் பெரியார் நகரைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (52) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று முன்தினம் (ஜன.28) இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எண்ணம் தோன்றினால் ஆலோசனை பெற மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104-ஐ அழைக்கவும்.
பெரம்பலூரில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வக்குமார், இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணனுக்கு சிறந்த கவுன்சிலர் விருது வழங்கினார். கவிப்பிரியா, தக்சா, ஸ்ரீராம், சூர்யா சிறந்த ஜூனியர்களுக்கான சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்டக் கன்வீனர் ஜோதிவேல், பாராட்டு தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் உட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (ஜன.31) காலை 11 மணிக்கு ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா 31.01.2025 அன்று தொடங்கி 09.02.2025 வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்த புத்தகத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தயாராகி வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், இடுபொருட்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். இதில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் இன்று (ஜன.28) முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை (ஜன.29) முதல் 31-ஆம் தேதி வரை நடக்கும் முகாம்கள் திட்டமிட்டபடி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. share it…
பெரும் வனப்பகுதி, ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரம், மயிலும் அருவி, சோழ கங்கம் ஏரி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ‘பெரும்புலியூர்’ என்றழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டத்தை பார்க்கலாம். எங்கும் வனப்பகுதியான இருந்த பெரம்பலூர் புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்த ஒரு இடமாகும். அதுமட்டுமின்றி அழகிய மலைகளும், மலைகள் சூழ்ந்த பகுதிகளும் இங்கு நிறைந்து அகழாய்வுகள் ஏற்ற இடமாக தற்போது உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஒன்றியங்களில் “மக்களுடன் முதல்வர் திட்டத்தின்” மூலம் 3 ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் நாளை (ஜன-28), முதல் ஜன-31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் (நாளை ) மட்டும் டி.களத்தூர், செஞ்சேரி லாடபுரம், எளம்பலூர், எசனை ஆகிய பகுதிகளில் நடைபெறவிருந்த 5 முகாம்கள் மட்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற செயலாளராக வெவ்வேறு பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பானுமதி (40) என்பவர் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் நொச்சிக்குளம் ஊராட்சியில் பணியாற்றும்போது போலியான பில் தயாரித்து ரூ.78 ஆயிரத்தை ஊராட்சி நிதியிலிருந்து கையாடல் செய்துள்ளதாக பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.