Perambalur

News February 15, 2025

பெரம்பலூர்: பறவைகள் கணக்கெடுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தில் பெரம்பலூர் ரோட்டராக்ட் சங்கம் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நடத்திய ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) இன்று (15.02.1024) அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியஏரியில் நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் அடக்கம் பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

News February 15, 2025

பெரம்பலூரில் 12 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நட அனைத்துத் துறைகள் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி 2023- 2024 ஆம் ஆண்டில் வனத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ அமைப்புகள் மூலம் 10.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News February 15, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம அளவில் நடைபெறவுள்ள உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திடலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே பிரபல தனியார் கண் மருத்துவமனை முன்பு இன்று (பிப்-14) சுமார் 60 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்தநிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு 2024-2025ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது வழங்கப்படவுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் perambalur.nic.in-ல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சமர்ப்பிக்க 01.05.2025 அன்று கடைசி தேதி என்று மாவட்ட நிர்வாக சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

அரசு பேருந்தில் பயணிக்க போலீசாருக்கு வழங்கப்பட்ட இலவச பாஸ்

image

கடந்த 2024ஆம் ஆண்டு மே 22 அன்று அரசு பஸ்சில் டிக்கட் எடுப்பதில் பயணம் செய்த போலீஸ் ஒருவருக்கும், பஸ் கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதன் பின்னர், போலீசார் விதிறை மீறும் அரசு பேருந்துகளுக்கு அபாராதம் விதிக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் கோரினர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நேற்று பெரம்பலூரில் எஸ்.பி காவலர்களுக்கு பாஸ்-ஐ வழங்கினார்.

News February 14, 2025

3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது

image

பெரம்பலூரில் 3 பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்த திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (27) என்ற நபரை பாதிக்கப்பட்ட முதல் மனைவி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினேஷை நேற்று (பிப்.13) மாலை, பெரம்பலூர் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2025

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. பெரம்பலூரில்உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். 

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>(இங்கு)<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!