Perambalur

News February 2, 2025

பெரம்பலூரில் தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா 

image

தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழக மாவட்ட தொண்டர் அணி தலைவர் K.கர்ணா தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசுகையில் ஒரு ஆண்டு காலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் 2026ஆம் ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

News February 2, 2025

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம்: கலெக்டர்

image

பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் மக்காசோளத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். மேலும் விவரங்களுக்கு ,பெரம்பலூா் விற்பனைக்குழு மேற்பாா்வையாளரை 93613-89690, 79040-43838 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

News February 1, 2025

பெரம்பலூர்: புத்தக தானம் செய்த அமைச்சர்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன 31) இரவு 9 வது புத்தக கண்காட்சியை தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் துவக்கி வைத்தார்கள். பின்பு அமைச்சர்கள் மற்றும் பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் சிறைவாசிகளுக்காக புத்தகதான பெட்டியில் புத்தக தானம் செய்தார்கள்.

News January 31, 2025

பெரம்பலூர் 9வது புத்தக திருவிழா.

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பண்பாட்டு இயக்கம் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இன்று (31-01-2025) தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News January 31, 2025

கீழப்பெரம்பலூர்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

குன்னம் தாலுகா, கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ,இன்று (31.01.2025) ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 3-ஆம் கட்ட சிறப்பு முகாமினை, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்,போக்குவரத்து துறை அமைச்சரும்,குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உடனிருந்தனர்.

News January 31, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஆயிரத்து 700 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை நடைபெறுகிறது. மக்காச்சோளத்தை பெரம்பலூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வேளாண் விளைப்பொருட்களுக்கு நல்ல விலை பெற வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

பெரம்பலூர்: வரி செலுத்த நகராட்சி அழைப்பு

image

பெரம்பலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, வாடகை, கட்டணம் ஆகியவற்றை செலுத்த நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையர் ராமர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் நகராட்சியில் செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக பொதுமக்கள் நகராட்சியில் வரி செலுத்த அறிவுறுத்தல்.

News January 31, 2025

பெரம்பலூர்: பொய் புகார் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

image

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சடையன். கடந்த 2021 எசனை அருகே நிறுத்தி வைத்திருந்த தனது டிராக்டரை காணவில்லை என காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் பெற்றுள்ளார். விசாரணையில், டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ.1 லட்சம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது, அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.

News January 30, 2025

பெரம்பலூர்: போலி சித்த மருத்துவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போலி மருந்தகம் கடை  வைத்து சிகிச்சை தருவதாக கிடைத்த தகவலின் பெயரில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், அரசு மருத்துவர் அன்பரசு, சித்த மருத்துவர் விஜயன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் குழுவினர் அதிரடி சோதனை நடத்தியபோது  துறைமங்கலம் பகுதியில் போலி மருத்துவர் இளையராஜா கைது செய்யப்பட்டார்.

News January 30, 2025

பெரம்பலூரில் 9வது புத்தகக் கண்காட்சி தொடக்கம்

image

பெரம்பலூர் மாநகரில் நாளை (ஜன.31) முதல் 9வது புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தக ஆர்வலர்களுக்கு விருந்தாக அமைய உள்ள புத்தக கண்காட்சியில் பல்வேறு இலக்கிய ஆளுமைகளும், இலக்கிய ஆர்வலர்களும், பட்டிமன்ற பேச்சாளர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளனர். பெரம்பலூரின் கல்வி நிறுவனங்களும் இதில் பங்கு பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளன.

error: Content is protected !!