Perambalur

News August 8, 2025

பாடாலூர் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மகன் சாமிநாதன் (36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு ஆளான சாமிநாதனை அவரது மனைவி கார்த்திகா பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 8, 2025

பெரம்பலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது<> https://pgportal.gov.in/<<>> என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 8, 2025

பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் ஒப்பந்த செவிலியர் பணி!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 22 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகவல்களை பூர்த்தி செய்து வருகிற ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் பரப்புரை திட்டமான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி (ஆகஸ்ட் 13) அன்று மற்றும் (ஆகஸ்ட் 28) ஆகிய நாட்களில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

News August 7, 2025

பெரம்பலூர்: அரசு பேருந்துகள் குறித்த புகார் எண்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் (0435- 2403724-26) தெரிவிக்கலாம். இதில் காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 7, 2025

பெரம்பலூர் : இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெற , பெரம்பலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

ரூ.8,40,000 இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஜெயராமன், தமிழ்செல்வி,செந்தில்வேலன், வேல்முருகன், அருள்மணி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டியவர்கள் பெயரை இதில் சேர்த்து ரூ.8,40,000 முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 7, 2025

பெரம்பலூர்: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’39’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கே <>க்ளிக் <<>>செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

பெரம்பலூர்: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

image

பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து அறிந்துக்கொள்ளவும்.

(தாலுகா வாரியாக)
▶️வேப்பந்தட்டை – 03
▶️பெரம்பலூர் – 06
▶️குன்னம் – 06
▶️ஆலத்தூர் – 06 SHARE IT NOW !!

News August 7, 2025

பெரம்பலூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் லாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியிலும், பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், (9.8.2025) முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளது. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை 30 வாரங்கள் நடைபெற உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!