Perambalur

News October 5, 2025

பெரம்பலூர்: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 5, 2025

பெரம்பலூரில் அதிரடியாக சோதனை

image

பெரம்பலூர் குன்னம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் சாலையோரமாகவே வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடினர். இதையடுத்து முறையான அனுமதி பெறாத குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றி வரப்பட்ட 23 டிப்பர் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 5, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் (4.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறலாம்?

image

பெரம்பலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News October 4, 2025

பெரம்பலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம்’ மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com இணையதளத்தில்<<>> பார்க்கலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE IT NOW…

News October 4, 2025

பெரம்பலூர்: வரலாற்று சிறப்புமிக்க 4 கோவில்கள்

image

பெரம்பலூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் கட்டாயம் செல்ல வேண்டிய நான்கு அதிசய கோவில்கள் பற்றி தெரிந்து கொள்வோம். 1.சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் 2. வாலிஸ்வரன் கோவில், வாலிகண்டபுரம் 3. அத்தியூர் வடமலை ஈஸ்வரர் கோவில் 4. மதனகோபாலசுவாமி கோயில். பெரம்பலூர் மக்களே இந்த கோடை விடுமுறையில் இங்க போயிட்டு வாங்க.. இதை SHARE பண்ண மறந்திடாதீங்க…

News October 4, 2025

பெரம்பலூர்: இந்தியன் வங்கியில் பணி வாய்ப்பு

image

பொதுத்துறை துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் 171 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 171
3. சம்பளம்: ரூ.64,000 – ரூ120000
4. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. கடைசி தேதி: 13.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News October 4, 2025

பெரம்பலூர்: Phone காணாமல் போனா No Tension!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>’சஞ்சார் சாத்தி’<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க. SHARE பண்ணுங்க!

News October 4, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

News October 4, 2025

பெரம்பலூர்: மலர்கள் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உதிரி மலர்கள் சாகுபடி செய்ய 1 எக்டேருக்கு ரூ.16,000, குமிழ் மலர்கள் சாகுபடி செய்ய 1 எக்டேருக்கு ரூ.60,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிற்கு சம்மங்கி சாகுபடி செய்வதற்கு 60 எக்டேருக்கு ரூ.36 லட்சம் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு நடவு பொருள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!