Perambalur

News February 7, 2025

குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது, சிறப்பு சிறார் காவல் திட்டத்தில் 2 சமூகப் பணியாளர் மற்றும் 1 உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ஆகிய தற்காலிக பணியிடங்களை நிரப்ப வரும் பிப்.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தை <>https://perambalur.nic.in<<>> என்ற இணையத்தில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

பெரம்பலூர்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (63) என்பவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்ததனால், மனமுடைந்த பெரியசாமி கடந்த 3-ஆம் தேதி தனது வயலுக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ள நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்துள்ளார்.

News February 7, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் நகராட்சித்திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழாவின் 8-ம் நாளான நாளை (07.02.2025) எழுத்தாளர்.நாஞ்சில் நாடன் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் “பெயரில் என்ன இல்லை” என்ற தலைப்பிலும், எழுத்தாளர் ‘சுளுநீதி’ இரா.முத்துநாகு “தமிழர் அறிவியலான சித்த மருத்துவம்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல்.

News February 6, 2025

பெரம்பலூர் : ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

image

பெரம்பலூர் நகராட்சி திடலில் தொடங்கப்பட்ட 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை 5.2.2025 வரை 27,825 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

பெரம்பலூர் புத்தக திருவிழா: ரூ.19 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை

image

பெரம்பலூரில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பார்வையிட்டுள்ளனர் என நகராட்சி நிர்வாகம் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று (பிப்.05) வரை ரூ.19.9 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 6, 2025

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை

image

மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளி, கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த நல்லதுரைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மகிலா நீதிமன்ற நீதிபதி இந்திராணி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

News February 5, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வரின் புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற exwel.schemes.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04329 – 221011 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 5, 2025

அரசு பள்ளி ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

DEO அலுவலகத்தில் வருகின்ற சனிக்கிழமை (08/02/2025) ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம், கூட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்படுகின்ற சவால்கள், மாணவர்களுடைய கல்வி கற்பதில் உள்ள சவால்கள், பள்ளியின் அடிப்படைத் தேவைகள், கழிவறை சுத்தம் குறித்து கேட்டறிந்து தீர்வு காணப்படும்.

News February 5, 2025

பெரம்பலூரில் 3வது நாளாக நீதிமன்றம் புறக்கணிப்பு

image

பெரம்பலூரில் அட்வகேட் அசோசியேட் அமைப்பைச் சேர்ந்த வக்கீல்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 3-வது நாளாக இன்றும் கோர்ட்டு பணி புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டம் காரணமாக பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், குன்னம் வேப்பந்தட்டை கோர்ட்டுகளில் வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!