Perambalur

News August 11, 2025

பெரம்பலூரில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதில், 1-5 வயதுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடியிலும், 6-19 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளி கல்லூரியிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாதவர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் வீடுவீடாக சென்று வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அவர்.

News August 10, 2025

விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்; எஸ்பி ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் நாளை(ஆக.11) விசிகா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டமானது விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தலைமையில், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அதற்கான இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆய்வு செய்தனர்.

News August 10, 2025

பெரம்பலூர் மக்களே உஷார்! இதை தெரிஞ்சிக்கோங்க!

image

பெரம்பலூர் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்

News August 10, 2025

பெரம்பலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

பெரம்பலூர் பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யுங்க..

News August 10, 2025

பெரம்பலூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா? Don’t Worry!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News August 10, 2025

சாலை விபத்தில் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

image

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் சேர்ந்த மலையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே மலையராஜா பலியானார். இந்நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 10, 2025

பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பத்தை பதிவிரக்கம் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து வருகிற ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். SHARE

News August 10, 2025

பெரம்பலூர்: குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் (11.08.2025) அன்று நடைபெறவுள்ளது. மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு (18.08.2025) அன்று வழங்கப்படவுள்ளது. எனவே குடற்புழு மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு; ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைஞர்களுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நேற்று (ஆக.9) நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த எம்பி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள ச. அருண்ராஜ்க்கு மரியாதை நிமிர்த்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஆகஸ்ட் 9) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் உடன் இருந்தனர்.

error: Content is protected !!