Perambalur

News October 6, 2025

பெரம்பலூர்: உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அணுகு சாலையில் உள்ள பாலம் அருகே, உடல் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 6, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை!

image

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E.,/ B.Tech., முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>LINK<<>>-ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளையே (அக்.7) கடைசி நாளாகும். வேலை தேடுவோருக்கு இதை SHARE செய்து உதவுங்க.

News October 6, 2025

பெரம்பலூர்: பிரிட்ஜ் வெடித்து விபத்து!

image

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் நேற்று மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட குறைந்த மின்னழுத்தம் காரணமாக சுமதி என்பவர் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்தது. இந்த நிலையில் நல்வாய்ப்பாக, சுமதி கூலி வேலைக்கு சென்றிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 6, 2025

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (அக்.06), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 6, 2025

பெரம்பலூர்: குட்கா விற்பனை செய்தவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவாய் கிராமத்தில் மருதமுத்து (32) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மருதமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 5, 2025

பெரம்பலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 5, 2025

பெரம்பலூர்: இலவச அரிசி, கோதுமை பெற APPLY..!

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். SHARE பண்ணுங்க

News October 5, 2025

பெரம்பலூர்: தலை நசுங்கி பெண் பலி

image

கீழப்புலியூர் மதுபான கடை அருகே இன்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற முதியவர் நிழலுக்காக படுத்து உறங்கியுள்ளார். அப்போது 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 5, 2025

பெரம்பலூர் மக்களே இதை மறந்துடாதீங்க!

image

பெரம்பலூர் மக்களே (07.10.2025) & (08.10.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
(7.10.2025)
1. ஜே.பி.எஸ்.மஹால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை வட்டம்
2.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பரவாய், குன்னம் வட்டம்
(8.10.2025)
1.அரசு உயர்நிலைப்பள்ளி, இலாடபுரம், பெரம்பலூர் வட்டம்
2. அரசு உயர்நிலைப்பள்ளி, ஜெமீன்பேரையூர், ஆலத்தூர் வட்டம்
மகளிர் உதவித்தொகை இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். பகிரவும்

News October 5, 2025

பெரம்பலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE .
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!