Perambalur

News August 21, 2025

பெரம்பலூர்: தமிழக போலீசில் வேலை

image

பெரம்பலூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.போலீஸ் ஆக வேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 21, 2025

பெரம்பலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஆக.,22) பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News August 21, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

பெரம்பலூர் மக்களே உஷார்.!

image

பெரம்பலூர் மக்களே..வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!

News August 20, 2025

பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

பெரம்பலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

பெரம்பலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! (<<17460341>>பாகம்-2<<>>)

News August 20, 2025

பெரம்பலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

பெரம்பலூர்: அப்பளம் போல் நொறுங்கிய கார்-ஒருவர் பலி

image

திருச்சி, செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52), இவருடைய மகன் ஈஸ்வரன் (18), பாஸ்கரின் நண்பரான பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (54) மற்றும் ஓட்டுநர் தனபால் (53) ஆகியோர் சென்னை நோக்கி சென்றபோது, பின்னால் வந்த ஒரு வாகனம் கார் மீது மோதியதில், கார் உருண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பாஸ்கர் உயிரிழந்தார். ஈஸ்வரன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

News August 19, 2025

பெரம்பலூர்: வங்கியில் பணி புரிய அரிய வாய்ப்பு

image

பெரம்பலூர் மக்களே.. வங்கியில் பணி புரிய அரிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.!

error: Content is protected !!