India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு நில பிரச்சினை காரணமாக லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகியோர்கள் கட்டையால் தாக்கியதில் அரசன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை முடித்து இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை (ம) அபராதம் விதிக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் புதியதாக கிரசர் அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதனை மறுபரிசீலனை செய்து புதிய கிரசர் ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க, 2 புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 3, 2025 அன்று அரசிதழில் வெளியான இந்த வழித்தடங்களில், பேருந்துகளை இயக்க விரும்புவோர் நவம்பர் 7-ம் தேதிக்குள் பரிவாகன் இணையதளம் வழியாக ரூ.1500 கட்டணம் மற்றும் ரூ.100 சேவை கட்டணம் என மொத்தம் ரூ.1600 செலுத்தி பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசரப் அலி (58). இவர் தனது ஸ்கூட்டரில் சொந்த வேலை காரணமாக திருமாந்துறை வரை சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதேநேரத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரண்ணன் (36) மற்றும் 4 பெண்கள் ஒரு காரில், திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அயன்பேரையூர் பிரிவு சாலையில், அசரப் அலியின் ஸ்கூட்டர் மீது கார் மோதி, அசரப் அலி உயிரிழந்தார்.

எளம்பலூர் சாலையில் உள்ள உப்பு ஓடை பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (52). இவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அக்குபஞ்சர், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பட்டய படிப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலி மருத்துவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
Sorry, no posts matched your criteria.