Perambalur

News April 16, 2025

பெரம்பலூர்: 10th முடித்தவர்களுக்கு 15000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள காப்பீட்டு முகவர் (Insurance Agent) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 16, 2025

பெரம்பலூரில் அரசியல் கட்சியினருக்கு ஆட்சியர் கெடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், இதர துறைகளுக்கு சொந்தமான நிலங்களில் மற்றும் பொது இடங்களில் உரிய அனுமதியின்றி நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஏப். 27-க்குள் அரசியல் கட்சியினர், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News April 16, 2025

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தாயார் எதிர்ப்பு-மாணவர் தற்கொலை!

image

வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியைச் சேர்ந்த முத்தையா (23) என்பவர் பெரம்பலூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்று வந்துள்ளார். இவர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கப் போவதாக வீட்டில் கூறியுள்ளார். இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தையா அவரது வயலுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News April 15, 2025

பெரம்பலூர்: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, , அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW.

News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்.

News April 15, 2025

கோடைகாலத்தில் குடும்பத்துடன் கொண்டாட சூப்பர் ஸ்பாட்

image

வேப்பந்தட்டை வட்டம் கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரம் மலை மீது அமைந்துள்ளது கோரையாறு அருவி. சுமார் 30 அடி உயரத்தில் மலை உச்சியிலிருந்து மூலிகை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது. தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏற்ற இடமாக இது உள்ளது. எனவே இந்த லீவுக்கு உங்க குடும்பத்தோடு போயிட்டு வாங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 15, 2025

பெரம்பலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Retail Sales Associate பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 15, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிராமங்களில் தங்கி ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நாளை (ஏப்.16) நடைபெறவுள்ளது. அதன்படி வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தும் மனுக்களை பெறவுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

News April 14, 2025

பெரம்பலூர்: செல்வம் அருளும் ஏகாம்படேஸ்வரர் கோயில்

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் எனும் ஊரில் ஏகாம்படேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள குபேரரை வணங்குவோர்க்கு வாழ்வில் அனைத்து வகையான செல்வம் செழித்து மன அமைதியுடன் வாழலாம் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்

News April 14, 2025

பெரம்பலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!