Perambalur

News October 7, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் வட்டாரம் மற்றும் ஆலத்தூரில் உள்ள மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (அக்.8) நடைபெறவுள்ளது. அதன்படி, அரசு உயர்நிலை பள்ளி லாடபுரம் (பெரம்பலூர் வட்டாரம்) மற்றும் அரசு உயர்நிலை பள்ளி ஜாமின் பேரையூர் (ஆலத்தூர்) ஆகிய இடங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 7, 2025

பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டா இத செய்ங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News October 7, 2025

பெரம்பலூர்: கலை இலக்கிய போட்டிகள் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த கலை இலக்கிய போட்டிகள், பெரம்பலூர் பாரத சாரண சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு 14.10.2025-ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 15.10.2025-ம் தேதியும் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 7, 2025

பெரம்பலூர்: குடும்ப அட்டைகள் குறைத்தீர்ப்பு முகாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அக்.11-ம் தேதி நடைபெறவுள்ளது. பெரம்பலூர் வட்டம் செங்குணம், வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம், குன்னம் வட்டம் கொளப்பாடி, ஆலத்தூர் வட்டம் காரை பகுதிகளில் இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு, குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 7, 2025

பெரம்பலூர்: ரூ.15,000 பரிசு வேண்டுமா?

image

தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்படும் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு தொகை தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.10.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 6, 2025

பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 6, 2025

பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா (70). இவர் மாடு மேய்க்க சென்ற செல்லப்பா அதன் பிறகு வீடு திரும்பாத நிலையில், அங்குள்ள குளத்தில் மூழ்கி செல்லப்பா பிணமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நேற்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 6, 2025

பெரம்பலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு!

image

பெரம்பலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டை பெற, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு பதிவு செய்யலாம் அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் பதிவு செய்து பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 6, 2025

பெரம்பலூர்: உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அணுகு சாலையில் உள்ள பாலம் அருகே, உடல் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 6, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை!

image

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E.,/ B.Tech., முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>LINK<<>>-ஐ கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு நாளையே (அக்.7) கடைசி நாளாகும். வேலை தேடுவோருக்கு இதை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!