India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் தெற்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் 50 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடுகளைப் பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 50 ஆடுகளில் 25 ஆடுகள் காணாமல் போனதையொட்டி பாடலூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.03.2025 அன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி பேசினர்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு <
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 முதல்வர் மருந்தகங்களை நேற்று திறந்து வைத்தார். அதன்படி, அவை அமைந்துள்ள பகுதிகள்: பெரம்பலூர், குரும்பலூர், இரூர், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், வாலிகண்டபுரம், பாளையம், லாடபுரம், வெங்கனூர், மங்களமேடு மற்றும் லப்பைகுடிகாடு ஆகிய 17 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.கூட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
பெரம்பலூர் நான்கு ரோடு சிவசக்தி நகரை சேர்ந்த முரசொலி மாறன் (22), பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், “ரமேஷ்கிருஷ்ணன் (40) என்பவர், திருச்சியைச் சேர்ந்த போலி சாமியார் ரகு (45) என்பவருடன் சேர்ந்து என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்” என்று கூறியிருந்தார். அதன்பேரில் ரமேஷ்கிருஷ்ணனை ஏற்கனவே கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்த நிலையில் போலி சாமியார் ரகுவும் நேற்று கைதானார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு நாளை(பிப்.24) முதல் பிப்.28ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பொதுத்தேர்வு அடுத்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்.15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாநிலங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பதக்கத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன், உதவி ஆய்வாளர்கள் சித்ரா, சுவாமிநாதன் ஆகியோர்களுக்கு இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ் பி ஆதர்ஷ் பசேரா பதக்கம் வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.