Perambalur

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

அரசு பேருந்தில் பயணிக்க போலீசாருக்கு வழங்கப்பட்ட இலவச பாஸ்

image

கடந்த 2024ஆம் ஆண்டு மே 22 அன்று அரசு பஸ்சில் டிக்கட் எடுப்பதில் பயணம் செய்த போலீஸ் ஒருவருக்கும், பஸ் கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதன் பின்னர், போலீசார் விதிறை மீறும் அரசு பேருந்துகளுக்கு அபாராதம் விதிக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் கோரினர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நேற்று பெரம்பலூரில் எஸ்.பி காவலர்களுக்கு பாஸ்-ஐ வழங்கினார்.

News February 14, 2025

3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது

image

பெரம்பலூரில் 3 பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்த திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (27) என்ற நபரை பாதிக்கப்பட்ட முதல் மனைவி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினேஷை நேற்று (பிப்.13) மாலை, பெரம்பலூர் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2025

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு (மற்றும்) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. பெரம்பலூரில்உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். 

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>(இங்கு)<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>(இங்கு)<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.15) ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்படுகின்ற சவால்கள், மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள சவால்கள், பள்ளியின் அடிப்படைத் தேவைகள், கழிவறை சுத்தம் குறித்து கேட்டறிந்து தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

பெரம்பலூர்: அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த துறைமங்கலம் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த சசிகரன் (32), அவரது தம்பி ரவிகரன் (30) ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி, கலெக்டருக்கு பரிந்துரைத்ததன் அடிப்படையில் அவர்கள் 2 பேரையும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News February 12, 2025

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 12.02.2025-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார்.இந்த முகாம் மூலம் 29 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க அழைப்பு

image

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவரது குடும்பத்தினர் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடனுதவி பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்தியில் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக காக்கும் கரங்கள் என்னும் புதிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், கடன் தொகையில் 30 சதவீதமாக பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!