Perambalur

News March 1, 2025

“சோளம் விற்று ₹77 லட்சம் வருவாய்?”

image

அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு திருச்சி நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய பயணியிடம் இருந்து ₹77 லட்சம் பணம் பறிமுதல். சோளம் விற்ற பணத்தை எடுத்துவருவதாக பிடிபட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வினோத் குமார் விசாரணையில் கூறியுள்ளார். ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2025

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் 78 000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26-க்குள் இருக்கும் தகுதியானவர்கள் <>www.ioci.com<<>> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News February 28, 2025

10ஆம் வகுப்பு பாஸ் போதும்.. அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..

image

அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10,000 – 29,380 வரையிலான மாதச் சம்பளத்தில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, <>{https://indiapostgdsonline.gov.in}<<>> என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

News February 28, 2025

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலை வாய்ப்பு மையமும் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைஅறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. விருப்பம் உள்ளவர்கள் <>https://www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாமென மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

திருமாந்துறை: புதிய மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி திறப்பு

image

குன்னம் தொகுதி, திருமாந்துறை ஊராட்சியில் ரூ. 27.25 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை இன்று (பிப்-27) தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்,மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்,இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News February 27, 2025

மருத்துவமனை கட்டும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர்

image

குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், வேப்பூர் கிராமத்தில், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News February 27, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <>iocl.com<<>> என்ற இனையத்தை அனுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்: காவலர் கைது

image

பெரம்பலூரைச் சேர்ந்த கைதி ஒருவர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு காவல் பணியில் இருந்த பெரம்பலூர் காவல் நிலைய காவலர் இளம் ராஜா மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று இளம் ராஜாவை கைது செய்துள்ளனர்.

News February 27, 2025

2020ஆம் ஆண்டு கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

image

எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரும், வடக்கு மாதவி சாலையில் உள்ள நவாஸ் முகமது என்பவரும் கடந்த 2020ஆம் ஆண்டு ஆத்தூர் சாலையில் உள்ள காலி இடத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், நவாஸ் முகமது என்பவர் விஜயகுமாரின் கழுத்தில் பாட்டிலால் குத்தியதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் நீதிபதிமன்றம் நேற்று நவாஸ் முகமதுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

News February 26, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

image

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று (26.02.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!