Perambalur

News October 9, 2025

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தங்களின் சுய ஆதாரங்களை கொண்டு ரூ.600 அரசு கட்டணத்தை செலுத்தி (10.10.2025) நாளைக்குள் இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

பெரம்பலூர்: புதிய ஆரம்ப சுகாதார மையத்திற்கு அடிக்கல்

image

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் எசனை ஊராட்சியில் 15வது நிதிக்குழுவின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப துணை சுகாதார மைய கட்டத்திற்குப் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபாகரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். உடன் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார் கலந்துகொண்டனர்.

News October 9, 2025

பெரம்பலூர்: இந்திய அஞ்சல் வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) 348 Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.30,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. ஆரம்ப தேதி: 09.10.2025
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க<<>>
இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News October 9, 2025

பெரம்பலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

image

பெரம்பலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News October 9, 2025

பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (அக்.10) உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆலத்தூர் வட்டம், அருணகிரி மங்கலத்தில் அமைந்துள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அருணகிரி மங்கலம், ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

பெரம்பலூர்: 121 கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

image

பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய 4 ஒன்றியத்தில் 121 கிராம ஊராட்சியில் அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சமை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 2025 அக்.11-ம் தேதி அன்று காலை 10 மணியளவில் ஊராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என ஊராக வளர்ச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

News October 9, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (அக்.09) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பெரம்பலூர் நகர் பகுதிகள், பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவி சாலை, GH சாலை, புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், அருமடல் பிரிவு ,சிட்கோ, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9:45 மணி முதல் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

News October 9, 2025

பெரம்பலூர்: குட்கா பொருள் விற்ற பெண் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் நேற்று (அக்.08) போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஆதனூர் கிராமத்தில் அலமேலு (45) என்பவர், அவரது மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளியைக் கைது செய்து அவரிடமிருந்த 7.035 கி.கி எடையுள்ள குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News October 9, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.08) இரவு முதல் இன்று (அக்.09) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!