India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான குறும்படப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் குறும்படங்கள் dswoprmblr2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு GOOGLE DRIVE LINK ஆக 03-03-2025 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04328-296209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் இன்று தகவல்.
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் வட்டார அரசு மருத்துவமனையின் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவின் username மற்றும் password ஐடியை வைத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கிய கும்பகோணத்தை சேர்ந்த முகமது பரித் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அய்யனார்பாளையம் கிராமத்தில் 2 பெண் குழந்தைகளுடன் செல்வகுமார் (30) – செந்தமிழ்செல்வி (25) என்ற தம்பதியருக்கு இடையே சமீபத்தில் குடும்ப தகராறு ஏற்பட்டதால், செந்தமிழ்செல்வி, விஷத்தை குடித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் உதவி ஆட்சியர் கோகுல் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மற்றும்) தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் 2025ஆம் பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் 15.04.2025 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தில் பெரம்பலூர் ரோட்டராக்ட் சங்கம் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நடத்திய ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) இன்று (15.02.1024) அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியஏரியில் நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் அடக்கம் பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நட அனைத்துத் துறைகள் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி 2023- 2024 ஆம் ஆண்டில் வனத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ அமைப்புகள் மூலம் 10.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம அளவில் நடைபெறவுள்ள உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திடலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே பிரபல தனியார் கண் மருத்துவமனை முன்பு இன்று (பிப்-14) சுமார் 60 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்தநிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு 2024-2025ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது வழங்கப்படவுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் perambalur.nic.in-ல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சமர்ப்பிக்க 01.05.2025 அன்று கடைசி தேதி என்று மாவட்ட நிர்வாக சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.