India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.08) தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களையும், தேவையான ஆவணங்களையும் கொண்டு வந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில்தொடங்க, ₹1கோடி வரை மானியத்துடன் கூடியவங்கிக்கடன் வழங்கப்படும் இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில், இதற்கு தகுதியுடையோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 8) நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை சமாதானமாகப் பேசி முடித்து கொள்ளலாம்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-276317 என்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் (ம) (ம) மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (ம) (ம) சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம் சேர www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 04328-276317 என்னை தொடரப்பு கொள்ளவும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை ரேகையினை 31.03.2025-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள PoS இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று, ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், “2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் உழவர் சங்கங்கள் தங்களுடைய கருத்துக்களை உழவர் செயலியிலோ அல்லது tnagribudget2025@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.