Perambalur

News August 16, 2025

பெரம்பலூர்: கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் உதவி

image

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.

News August 16, 2025

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

image

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News August 16, 2025

பெரம்பலூர்: குடும்ப வன்முறையா? உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9488018205) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News August 16, 2025

பெரம்பலூர்: வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை

image

வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள டி.ஏ.பி மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை ஆய்வு செய்தார். அப்போது அவர், “உரங்களை மூட்டையில் உள்ள விலைக்கு மேல் அதிகமாக விற்றால் மற்றும் விற்பனை செய்யும்போது அத்துடன் இணைப்பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தினால் விற்பனை உரிமம் ரத்து செய்து, நீதிமன்ற வழக்கு தொடரப்படும். என்று எச்சரித்துள்ளார்.

News August 16, 2025

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

image

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News August 15, 2025

பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தண்டாயுதபாணி திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான தண்டாயுதபாணி சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 15, 2025

பெரம்பலூர்: இலவச AI பயிற்சி! APPLY NOW

image

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து பயன்பெறவும். இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 15, 2025

சிறந்த நகராட்சிகளில் 3ம் இடம் பிடித்த பெரம்பலூர்

image

ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (15/8/25) சுதந்திர தினத்தை ஒட்டி வழங்கப்படும் சிறந்த மூன்று நகராட்சிகளில் பெரம்பலூர் நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் இதில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. மூன்றாம் பரிசு பெற்ற பெரம்பலூருக்கு ரூ.10 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது.

News August 15, 2025

பெரம்பலூர்: 39 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’39’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 14, 2025

பெரம்பலூர் மக்களே.. ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு!

image

பெரம்பலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து பெறலாம். SHARE IT NOW!

error: Content is protected !!