India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.11) இரவு முதல் இன்று (அக்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

வெண்பாவூர் கிராமத்தில் மக்காச்சோள பயிரை காட்டுன்றியிடமிருந்து காப்பாற்றுவதற்காக பெரியசாமி என்பவர் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை பெரியசாமியும் பக்கத்துக்கு வயலைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரும் அந்த மின் வேலியில் எதிர்பாரா விதமாக சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு இங்கே <

திருவளக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பாடாலூர் அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரபாகரன் தலையின் மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. கடைசி தேதி: 09.11.2025
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.10) இரவு முதல் இன்று (அக்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் (11.10.2025) நாளை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணி: கிராம ஊராட்சி செயலர்
2.கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
3.சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
4.ஆன்லைனில் விண்ணப்பம்: Click <
பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கபடவுள்ளது. நீங்களும் உடனே Apply பண்ணுங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.