India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க வேண்டி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் வீ.முத்துசாமி நன்றி உரை கூறினார்.
தமிழக அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, நிதி, சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை நிகழ்வினை நேரலையாக பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் காணும் வகையில் 14 இடங்களில் நேற்று நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு இந்த ஊர் பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. SHARE பண்ணுங்க.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் மக்களே SHARE பண்ணுங்க…
முருகனை வேலுடன் கண்டிருப்பீர்கள் ஆனால் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக்கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும். மேலும் இனிமையான வாழ்க்கைத் துணை அமைவார்கள் என்ற ஐதிகம் உள்ளது. கல்யாணத்திற்கு பெண்/பையன் தேடும் உங்களுக்கு தெரிந்தவர்களை இந்த கோயில் குறித்து SHARE பண்ணுங்க…
கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர். மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள். இதை SHARE பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமாருக்கு பெரம்பலூர்-துறையூர் ரோடு கல்யாண் நகரில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டின் மேல் தளத்தில் உள்ள 2 வீடுகளையும் வாடகைக்கு விட்டுவிட்டு, தரைதளத்தில் உள்ள வீட்டை பூட்டி வைத்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.13,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1.68 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இம்முகாமில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தில் முத்து 28. அவரது தாயார் ராகிணி இருவரும் அதே ஊரில் உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றனர். முத்து விரித்த வலையில் சிக்கிய மீன்களை பிடிக்க, தண்ணீரில் கேன் மீது அமர்ந்து மீன்களை பிடித்தனர்.அப்போது எதிர்பாராதவிதம முத்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கள்ளக் காளிங்கராயநல்லூரைச் சேர்ந்த முத்து (28) மற்றும் அவரது தாயார் ராகிணி இருவரும் நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக முத்து தவறி விழுந்து ஓடை நீரில் மூழ்கி தன் தாய் கண்முன்னே இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.