Perambalur

News February 27, 2025

மருத்துவமனை கட்டும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர்

image

குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், வேப்பூர் கிராமத்தில், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News February 27, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <>iocl.com<<>> என்ற இனையத்தை அனுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்: காவலர் கைது

image

பெரம்பலூரைச் சேர்ந்த கைதி ஒருவர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு காவல் பணியில் இருந்த பெரம்பலூர் காவல் நிலைய காவலர் இளம் ராஜா மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று இளம் ராஜாவை கைது செய்துள்ளனர்.

News February 27, 2025

2020ஆம் ஆண்டு கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

image

எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரும், வடக்கு மாதவி சாலையில் உள்ள நவாஸ் முகமது என்பவரும் கடந்த 2020ஆம் ஆண்டு ஆத்தூர் சாலையில் உள்ள காலி இடத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், நவாஸ் முகமது என்பவர் விஜயகுமாரின் கழுத்தில் பாட்டிலால் குத்தியதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் நீதிபதிமன்றம் நேற்று நவாஸ் முகமதுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

News February 26, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

image

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று (26.02.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

News February 25, 2025

செட்டிகுளத்தில் 25 ஆடுகள் திருட்டு

image

ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் தெற்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் 50 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடுகளைப் பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 50 ஆடுகளில் 25 ஆடுகள் காணாமல் போனதையொட்டி பாடலூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

News February 25, 2025

பெரம்பலூர் : தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.03.2025 அன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம் 

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி பேசினர்.

News February 25, 2025

பெரம்பலூரில் வேலை வாய்ப்பு

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 25, 2025

பெரம்பலூரில் 17 முதல்வர் மருந்தகங்கள்: விவரம் 

image

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 முதல்வர் மருந்தகங்களை நேற்று திறந்து வைத்தார். அதன்படி, அவை அமைந்துள்ள பகுதிகள்: பெரம்பலூர், குரும்பலூர், இரூர், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், வாலிகண்டபுரம், பாளையம், லாடபுரம், வெங்கனூர், மங்களமேடு மற்றும் லப்பைகுடிகாடு ஆகிய 17 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!