Perambalur

News October 13, 2025

பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (12-10-2025) பெய்த மழை அளவின் விவரம் வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் 18 மிமீ, எரையூர் 32 மிமீ, V.களத்தூர் 44மிமீ, கிருஷ்ணாபுரம் 18 மிமீ, வேப்பந்தட்டை 9 மிமீ, அகரம்சீகூர் 30 மிமீ, லப்பைக்குடிக்காடு 27மிமீ, புதுவேட்டக்குடி 4மிமீ, பாடலூர் 12 மிமீ, செட்டிகுளம் 6மிமீ என பெரம்பலூர் மாவட்டத்தில் மழை 208 மிமீ அளவு பதிவாகியுள்ளது.

News October 12, 2025

பெரம்பலூர் மாவட்ட மழை அளவு விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (12-10-2025) மழை அளவின் விவரம் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் 18 மிமீ, எரையூர் 32 மிமீ, v.களத்தூர் 44மிமீ, கிருஷ்ணாபுரம் 18 மிமீ, வேப்பந்தட்டை 9 மிமீ, அகரம்சீகூர் 30 மிமீ, லப்பைக்குடிக்காடு 27மிமீ, புதுவேட்டக்குடி 4மிமீ, பாடலூர் 12 மிமீ, செட்டிகுளம் 6மிமீ என பெரம்பலூர் மாவட்டத்தில் மழை 208 மிமீ அளவு பதிவாகியுள்ளது.

News October 12, 2025

மேலமாத்தூர்: தேர்வறையில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

பெரம்பலூரில் இன்று (அக்.12) முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர், தேர்வர்கள் முறையான நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்திருக்கிறாங்களா என்று ஆய்வு செய்தார்.

News October 12, 2025

பெரம்பலூர் மக்களே.. ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா?

image

பெரம்பலூர் மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

பெரம்பலூர்: ரயில்வேயில் வேலை.. சூப்பர் வாய்ப்பு

image

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 12, 2025

பெரம்பலூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா?

image

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. மாதம் எவ்வளவு கரண்ட் பில் என தகவல் உங்க போனுக்கே வந்திடும். மேலும் தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 12, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News October 12, 2025

பெரம்பலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (அக்.13), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு சிறப்பு பயிற்சி

image

பெரம்பலூர் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று (அக்.11) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி மற்றும் துப்பாக்கி பயிற்சி ஆகிய சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட எஸ்.பி காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

News October 12, 2025

பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின் தடை!

image

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் மற்றும் கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை (அக்.13) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். எனவே புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், மாத்தூர், நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், கீழப்பெரம்பலூர், வயலபாடி, அகரம்சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!