India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரி, ஸ்வீட் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட இனிப்பு, கார வகைகள் தயாரிப்பவர்கள் FSSAI. பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் வரகுபாடி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இன்று காலை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கோட்டத்தூரை கிராமத்தைச் சேர்ந்த வைரபெருமாள் மகன் ராஜா (55) என்பவரிடம் 150 மது பாட்டில்கள் இருந்தனர், அவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <

பெரம்பலூர் அருகே அறுமடல் சாலை பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல், கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் அதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (அக்.14) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.14) நடைபெற உள்ளது. இந்த குறை தீர்க்கும் முகாமில், ஓலைப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டு, தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் அரசின் திட்டங்கள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (12-10-2025) பெய்த மழை அளவின் விவரம் வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் 18 மிமீ, எரையூர் 32 மிமீ, V.களத்தூர் 44மிமீ, கிருஷ்ணாபுரம் 18 மிமீ, வேப்பந்தட்டை 9 மிமீ, அகரம்சீகூர் 30 மிமீ, லப்பைக்குடிக்காடு 27மிமீ, புதுவேட்டக்குடி 4மிமீ, பாடலூர் 12 மிமீ, செட்டிகுளம் 6மிமீ என பெரம்பலூர் மாவட்டத்தில் மழை 208 மிமீ அளவு பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.