Perambalur

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்

image

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <>இதை கிளிக்<<>> செய்து மார்ச் 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் மார்ச்-23 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 17, 2025

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த செல்லம்(48) என்பவரது மகன் அகிலன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்த நிலையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் செல்லம் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், நேற்று முன்தினம் இரவு விஷம் அருந்தி செல்லம் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2025

லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

image

செட்டிகுளம் கிராமத்தில் சுரேஷ் – 50 லாரி டிரைவர் இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிகிறது. இந்நிலையில் செட்டிகுளத்தில் உள்ள அவரது வயலுக்கு அருகே பூச்சிகொல்லி மருந்து குடித்து சுரேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

News March 16, 2025

இலவச ஆங்கில பயிற்சி குறித்த அறிவிப்பு

image

தாட்கோ மூலம் பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங்; போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர தாட்கோ <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 16, 2025

பெரம்பலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 15, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு நாளை தொல் திருமாவளவன் வருகை

image

நாளை (15-03-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னம், வேப்பூர், திருமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் தனது கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்விற்கு நாளை பங்கேற்க உள்ளதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்

News March 15, 2025

உலகப் புகழ் பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம்

image

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இந்த மரச்சிற்பத்துக்கு 250 வருடங்களுக்கு முன்பே பழமையான வரலாற்றுச் சிறப்பு உள்ளது. இந்தப் பகுதியில் வாழும் மரச்சிற்பிகள், ஸ்ரீரங்கம் கோயில், அவிநாசி, வடபழனி, விராலிமலை என தமிழகத்தின் பல பிரசித்தி பெற்ற கோயில்களில் தேர்களைச் செய்தவர்கள். நம்ம மாவட்டத்தின் பெருமையை SHARE பண்ணுங்க!

News March 15, 2025

வேளாண் பட்ஜெடில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 15) வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வாடகை கட்டடங்களில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சொந்தமாக கட்டடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விவசாய மக்களே இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News March 15, 2025

சோழர்கள் முதல் பிரிட்டிஷார் வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17வது நூற்றாண்டைச் சார்ந்த ரஞ்சன்குடி கோட்டை, 1751 ஆம் ஆண்டில் வாலிகொண்டா போரின் போது போர் மையமாக இருந்தது.இதுமட்டும் அல்லாது ரஞ்சன்குடி கோட்டை, சோழர்கள் முதல் பிரிட்டிஷார் வரை பல போர்கள் நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஆகும். நம்ம ஊரு வரலாறை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!