India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-276317 என்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் (ம) (ம) மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (ம) (ம) சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம் சேர www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 04328-276317 என்னை தொடரப்பு கொள்ளவும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை ரேகையினை 31.03.2025-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள PoS இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று, ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், “2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் உழவர் சங்கங்கள் தங்களுடைய கருத்துக்களை உழவர் செயலியிலோ அல்லது tnagribudget2025@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (60) நேற்று முன்தினம் எறையூரில் இருந்து கல்லை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நன்னை கிராமம் அருகே எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் தந்தை ஹேன்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூர் சுற்றுவட்டார மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், மாவிலங்கை கிராமத்தில் 12ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களின் தேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, மாவிலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவிலங்கை VAO அலுவலகத்தில் முகாம் நடைபெறுவதற்கு முன்பே அளிக்குமாறு ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மாவிலங்கை கிராமத்தில் வரும் மார்ச்.12ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தற்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் பணி நடைபெற்று வருகின்றது. ஆலத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரம்பலூர் அருகே உள்ள பேரலி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்ததால் காலை வகுப்பு இல்லாத நிலையில், நண்பர்களுடன் ஒதியம் பாதையில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது ஆழமான இடத்தில் மூழ்கியுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.