India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கொட்டாரக்குன்று கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கதுரை(37) என்பவர் தனது விவசாய நிலத்தில் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு வெடிகுண்டு வைக்கும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தங்கதுரை படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் சார்பில் நேற்று (08.03.2025) தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 332 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்த நிகழ்வின்போது பெரம்பலூர் எம்.பி அருண்நேரு மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு வனத்துறை, பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு-2025 நடைபெற உள்ளது. அதன்படி ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று மற்றும் இன்றும் (மார்ச்.8,9); நிலம்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 15, 16ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் 7904695995, 9597837928 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட உலக மகளிர் நாள் விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அந்நிகழ்ச்சியை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேரலையில் கண்டு பின், மாவட்டத்தில் உள்ள 658 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 48.46 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.08) தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களையும், தேவையான ஆவணங்களையும் கொண்டு வந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில்தொடங்க, ₹1கோடி வரை மானியத்துடன் கூடியவங்கிக்கடன் வழங்கப்படும் இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில், இதற்கு தகுதியுடையோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 8) நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை சமாதானமாகப் பேசி முடித்து கொள்ளலாம்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
Sorry, no posts matched your criteria.