India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வேறு பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. உங்க ஊர் பெருமைய SHARE பண்ணுங்க..
பெரம்பலூர் நெடுவாசல் பிரிவு சாலை அருகே மினி பஸ் மீது கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து 4 பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்: (22.03.2025)மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்
தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின் மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட நிலையில், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலியன் மகன் மதியழகன் (45) என்பவர், தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து வைத்திருந்தார். 2 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனர்.
வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (22.03.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்வில் சுகாதார நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் கஜேந்திரன் எனபவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில், முதுநிலை மேலாளராக ச.சதீஷ் (37) பணியாற்றி வந்தார். இந்நிலையில், சதீஷ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்கில் காட்டாமல் ரூ. 28,46,764 மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது. இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சதீஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மற்றும் 11,12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆயத்த கூட்டம் இன்று (21.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து 4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவி விடுதிகள், 6 பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவி விடுதிகள் என 10 மாணவி விடுதிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை (RO) மாணவிகளின் பயன்பாட்டுக்கு, விடுதி காப்பாளினிகளிடம் இன்று (21.03.2025) வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.