Perambalur

News October 17, 2025

பெரம்பலூர்: நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 24.10.2025ம் தேதி அன்று பிற்பகல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: சொந்த உணவகம் நடத்த வாய்ப்பு!

image

குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியிலும் உணவகம் நடத்துவதற்கு விருப்பம் மற்றும் தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையவர்கள் 23.10.2025க்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பில் விண்ணப்பங்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவித்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம் .

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 16, 2025

பெரம்பலூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

image

பெரம்பலூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 16, 2025

பெரம்பலூர்: வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டனம்

image

இன்று (16.10.2025) காலை பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து வருவாய் சங்க மாவட்ட பொருளாளர் குமரி ஆனந்தன் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனே அரசு செயல்படுத்திட வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

News October 16, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

image

உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசி அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், விசிக கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேல் மற்றும் கலையரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News October 16, 2025

தேசிய அளவில் பெரம்பலூர் மாவணவர்கள் சாதனை

image

அகில இந்திய தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவி ஒருவர் மற்றும் இரண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேற்று (15.10.2025) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்த மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 16, 2025

பெரம்பலூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

image

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <>ECINET என்ற செயலியின்<<>> மூலம் புதிய வாக்காளர் அட்டை, புதுப்பிப்பது போன்றவற்றை செய்யலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News October 16, 2025

பெரம்பலூர்: டிகிரி பொதும் இந்திய ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க….

News October 16, 2025

பெரம்பலூர்: போலீஸ் ஜீப் மோதி விவசாயி பலி

image

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கராஜ் (55). இவர் அக்.14 இரவு தனது பைக்கில் தாழை நகர் அருகே சென்றபோது, இரவு ரோந்து பணியில் இருந்த அரும்பாவூர் காவல் நிலைய ஏட்டு பிரபு ஓட்டி சென்ற போலீஸ் ஜீப், ரெங்கராஜ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!