Perambalur

News March 13, 2025

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கதை தெரியுமா?

image

கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர். மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள். இதை SHARE பண்ணுங்க.

News March 13, 2025

வீட்டின் கதவை உடைத்து திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமாருக்கு பெரம்பலூர்-துறையூர் ரோடு கல்யாண் நகரில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டின் மேல் தளத்தில் உள்ள 2 வீடுகளையும் வாடகைக்கு விட்டுவிட்டு, தரைதளத்தில் உள்ள வீட்டை பூட்டி வைத்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.13,000-ஐ திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 12, 2025

ஆலத்தூர் முகாமில் பங்கேற்ற ஆட்சியர்

image

ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1.68 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இம்முகாமில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 12, 2025

பெரம்பலூர் அருகே ஓடையில் மூழ்கி வாலிபர் பலி

image

பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தில் முத்து 28. அவரது தாயார் ராகிணி இருவரும் அதே ஊரில் உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றனர். முத்து விரித்த வலையில் சிக்கிய மீன்களை பிடிக்க, தண்ணீரில் கேன் மீது அமர்ந்து மீன்களை பிடித்தனர்.அப்போது எதிர்பாராதவிதம முத்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 12, 2025

மீன் பிடிக்க சென்ற வாலிபர் ஓடையில் மூழ்கி பலி

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கள்ளக் காளிங்கராயநல்லூரைச் சேர்ந்த முத்து (28) மற்றும் அவரது தாயார் ராகிணி இருவரும் நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள ஓடையில் மீன் பிடிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக முத்து தவறி விழுந்து ஓடை நீரில் மூழ்கி தன் தாய் கண்முன்னே இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 11, 2025

கீழப்பெரம்பலூர்: புதிய நியாயவிலைக்கடை திறப்பு

image

வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ரூ. 12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (மார்ச்-11) தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 11, 2025

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர்

image

குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூபாய் 36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பாடு அறையுடன்  கூடிய 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News March 11, 2025

பசும்பலூர்: வரலாறு புதைந்து கிடக்கும் பசு-உரையும்-கல்

image

நாடு விடுதலை அடைந்ததின் நினைவாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் மகன் ஆறுமுகம் பிள்ளை அவர்களால் பசும்பலூர் பேருந்து நிலையத்தில் நடப்பட்டுள்ள பசு உரையும் கல். இக்கற்கள் ஆவுரிஞ்சிக் கல்,பசு உரையுங் கல் என அழைக்கப்பட்டது. இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.பெரம்பலூர் (மா) சிறுவாச்சூர் ,பொம்மனப்பாடி பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. உங்க ஊர் பெருமையை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 10, 2025

ஆலத்தூர் தாலுகாவில் மக்கள் தொடர்பு திட்ட முகம்

image

ஆலத்தூர் தாலுக்கா, மாவிலங்கை கிராமத்தில், வருகிற 12ஆம்தேதி புதன்கிழமை, மாவட்டக் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

News March 10, 2025

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 381 மனுக்கள் பெறப்பட்டது.

error: Content is protected !!