Perambalur

News July 25, 2024

கருவில் இருக்கும் பாலினத்தை அறியும் கும்பல் கைது

image

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள பல்வேறு பெண்களின் பாலினத்தை சட்ட விரோதமாக கண்டறிவதற்காக, சட்ட விரோத கும்பல் பெண்கள் அனைவரையும் தர்மபுரியிலிருந்து பெரம்பலூருக்கு கொண்டு சென்றனர். அங்கு கருவின் பாலினத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் மர்மகும்பலை பெரம்பலூர் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

News July 25, 2024

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வயலில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு தோட்டக்கலைத் துறை மூலம் விண்ணப்பித்து மானியத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, சிறு குறு சான்று, அடங்கல், வரைபடம் நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News July 25, 2024

பெரம்பலூா் வட்டாட்சியருக்கு பிடி ஆணை

image

பெரம்பலூா் அடுத்த விளாமுத்தூரைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது 2.32 ஏக்கா் தரிசு நிலத்தை இவர் மற்றும் அவரது சகோதரா் மணி ஆகியோா் பிரித்து கொண்டனா். இதில் அவரின் சகோதரருக்கு கூடுதலாக இடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக துரைராஜ் வட்டாட்சியா் மீது மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் தற்போதைய வட்டாட்சியருக்கு பிடி ஆணை வழங்கி நேற்று உத்தரவிட்டது.

News July 25, 2024

பெரம்பலூர் காவல் நிலையம்  சிறந்த காவல் நிலையமாக தேர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் காவல் நிலையம் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் விருது வழங்கினார். இந்த விருதினை பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கருணாகரன் தமிழ்நாடு காவல்துறை இயக்குனரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார். சிறந்த காவல் நிலையத்திற்கு பெரம்பலூர் காவல் நிலைய காவல்துறையினரை எஸ்பி பாராட்டினார்.

News July 24, 2024

வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி, மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

News July 24, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26 அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

பெரம்பலூர் எம்பி கோரிக்கை மனு

image

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, பெரம்பலூரில் கோவிட் நோய்த் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 1,431 குழந்தைகளுக்கு வட்சால்யா மிஷன் திட்டத்தின் மூலம் உதவ வேண்டி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அவர்களை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

News July 24, 2024

கிராமப்புற இளைஞர்களுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு செய்யும் விதமாக கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி கைகாட்டி எதிரே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 6 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது முடிந்த 5ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள் அனைவரும் ஜூலை30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 24, 2024

பெரம்பலூரில் தீவிர தேடுதல் வேட்டை

image

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் ஊறல் போடுதல் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராய ஊறல் எங்காவது பதுக்கப்பட்டுள்ளதா, மேலும் விற்பனை செய்யப்படுகிறதா என்று மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தனசேகரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

News July 24, 2024

பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம், தக்காளி, வாழை, மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் அனைவரும் அருகிலுள்ள வேளாண் நிலையத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை ரூ.225 முதல் ரூ.3460 வரை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!