India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் மார்ச் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, பெரம்பலூரில் இரா. தேன்மொழி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் வட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ரூ 61,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் எடுத்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் ராஜா என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்தனர்..
தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன், மங்களமேடு அம்பிகாபதி, ஆதனூர் ஜீவா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய 4 பேர் 11 தங்கம், 1 வெள்ளி என 12 பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தனர். நேற்று பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுலிடம் பதக்கங்கள், சான்றிதழை காண்பித்து வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் பெற்றனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவினை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான 7ம்நாள் திருக்கல்யாணம் நேற்று மாலை 6 மணி அளவில் மங்கள வாத்திய முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச் -22 உலக தண்ணீர் தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி, நவம்பர் -1 உள்ளாட்சி தினம் ஆகிய 6 தினங்களில் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். மார்ச் -22 இன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாகவும், தேர்தல் பணி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டில் 18வது மக்களவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து, நேற்று(மார்ச் 21) வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் 23 பேர் வேட்பு மனு வாங்கி சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2024 மக்களவை தேர்தலில், I.N.D.I.A கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் பயணம் மேற்கொண்ட அருணுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 19ம் தேதி எம்எல்ஏ பிரபாகரன், திமுக கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ பிரபாகரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பெரம்பலூர் ,திருச்சி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மார்ச்-22 சிறுகனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின்
அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்குகிறார்.
பொதுக் கூட்ட திடலை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.