Perambalur

News August 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு நகர்வு தாமதமானதை தொடர்ந்து
ஜுலை மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆகஸ்ட் 14ஆம் தேதி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நாளை (15.08.2024) காலை 09.05 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடி ஏற்றிவைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்பி, எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 14, 2024

மாணவர் விடுதியை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.பி அருண்நேரு, எம்.எல்.ஏ.பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News August 14, 2024

புதிய மாவட்ட கண்காணிப்பாளர் பதவியேற்பு

image

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக சியாமளா தேவி பதவி வகித்து வந்த நிலையில் தற்போது, பெரம்பலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதார் பசேரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறினார். மேலும் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 14, 2024

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம்

image

தேசிய குடற்புழுநீக்க தினத்தை முன்னிட்டு, (ஆக-23 மற்றும் ஆக-30)ஆகிய தேதிகளில்,1 முதல் 19 வயதிற்க்குட்பட்ட குழந்தைகள்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்காணும் தேதிகளில் முகாம்கள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

News August 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு 

image

பெரம்பலூருக்குட்பட்ட துறைமங்கலம், பெரம்பலூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

News August 13, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2024 அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் இன்று தகவல்

News August 13, 2024

பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு 

image

பெரம்பலூருக்குட்பட்ட துறைமங்கலம், பெரம்பலூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

News August 13, 2024

வேப்பந்தட்டையில் முகாமில் எம்.பி. பங்கேற்பு

image

வேப்பந்தட்டையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

error: Content is protected !!