Perambalur

News April 14, 2025

புத்தாண்டில் இங்கு சென்று வழிபடுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், சிறுவாச்சூர் மதுராகாளியம்மன் கோயில், அத்தியூர் வடமலை ஈஸ்வரர் கோயில், அந்துர் சிவலோகநாத சுவாமி கோயில், மதனகோபால சுவாமி கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 13, 2025

பெரம்பலூர்: வடமலைஈஸ்வரர் கோயில்

image

பெரம்பலூர், அத்தியூரில் புகழ்பெற்ற வடமலைஈஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

பெரம்பலூர்: சிறுமியை கடித்து குதறிய நாய்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரலி கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி புவனேஸ்வரி(14). விடுமுறை என்பதால் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, புவனேஸ்வரியை கடித்துக் குதறியது. இதில், படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Retail Sales Associate பணியிடங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 12, 2025

பெரம்பலூர்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள விவேஷியஸ் அகடாமி (ம) தாட்கோ இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி (ம) ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், ஆதிதிராவிடர் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 12, 2025

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற அழைப்பு

image

லால்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின், பெரம்பலூர் துணை பயிற்சி நிலையத்தில் 2024-25-ம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 17வயது பூர்த்தி அடைந்தவர்கள் சேர <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்ங்க

News April 12, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கி, பின்னர் 2 மணி நேரம் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் குடை பிடித்தபடியே சென்றனர். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News April 11, 2025

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச மையத்தை நாடி தீர்வு காணலாம்

image

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக நடந்த விழிப்புணர்வு முகாமில்  நேற்று மாலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக இருபதாம் ஆண்டு  நடைபெற்ற சமரசத்தீர்வு தினத்தில் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிபதி சங்கர்  நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச மையத்தை நாடி தீர்வு காணலாம் விழிப்புணர்வு முகாமில் தலைமை குற்றவியல் நீதிபதி சங்கர் பேசினார்.

News April 11, 2025

சமையல்உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணபிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 15.04.2025 முதல் 29.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். Perambalur.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!