Perambalur

News April 3, 2025

பெரம்பலூரில் பிணித் தீர்க்கும் நந்திகேஸ்வரர் கோயில்

image

பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ளது இந்த நந்திகேஸ்வரர் கோயில். இக்கோயில் பிணி தீர்க்கும் தலம் என்று கூறப்படுகிறது. இங்குள்ள மூலவர் நந்திகேஸ்வரர், தாயார் நாகலெட்சுமி ஆவர். காமதேனு வழிபட்ட தலமாக போற்றப்படுகிறது. இங்கு அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனத்தை நீரில் கலந்து குடித்து வந்தால் குடல் நோய், வயிற்று வலி போன்ற தீரா நோயும் தீரும் என கூறப்படுகின்றது. உறவினர்கள், நண்பர்களுக்கு இதை பகிரவும்

News April 3, 2025

தொழில் துவங்க அறியவாய்ப்பு-கலெக்டர் தகவல்

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில்முனைவோருக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க அறிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆகவே, பெரம்பலூர் மாவட்ட தொழில் முனைவோர்கள் அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு 9150277723 எண்ணை அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தொழில் துவங்கவுள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க..

News April 3, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News April 2, 2025

மாணவிகளை தாக்கிய விடுதி சமையலர் பணியிட நீக்கம்

image

வெண்பாவூர் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் சமையலர் செல்வி, இரண்டு மாணவிகளை தாக்கிய சம்பவம் மாவட்ட நல அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News April 2, 2025

சனி தோஷம் நிவர்த்தியாகும் சோளீசுவரர் கோயில்

image

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

News April 2, 2025

பெரம்பலூரில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரீடைல் சேல்ஸ் அசோசியேட் பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 2, 2025

மக்கள் தொடர்புத்திட்ட முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

image

அகரம்சீகூர் கிராமத்தில், 09.04.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அகரம்சீகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அகரம்சீகூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆய்வுக்கூட்டம்

image

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (01.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News April 1, 2025

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (1.4.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News April 1, 2025

உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

image

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது பெரம்பலூருக்கு அருகில் உள்ள திருச்சியில் இருக்கும் பொழுதுபோக்கு இடங்கள் 1.வண்ணத்துப்பூச்சி பூங்கா, 2.கோளரங்கம், 3.அரசு அருங்காட்சியகம், 4.முக்கொம்பு, 5.புளியஞ்சோலை போன்ற இடங்கள் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..

error: Content is protected !!