India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை (28.10.2025) மாதந்திர பராமரிப்புபணி நடைபெறுவதால் புதுக்குறிச்சி, காரை, கொளக்காநத்தம், பாடலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின் தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், தேனூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (57) விவசாயி, இவர் நேற்று இரவு வயலில் மின் மோட்டார் பெட்டியில் பழுதான ஒயரை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கராஜ் உடலை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரியில் நேற்று (அக்.25) 6வது ஜூனியர் & 11வது சீனியர் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி (CwD Dwarfism) ஜீவா, 3 தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் இவர் வரும் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நேஷனல் அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108113>>பாகம்-2<<>>)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பருவமழைக் காலங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் காற்று காரணமாக மின்கம்பிகள் அருந்து கிடந்தால், அதனைத் தொடாமல் செல்ல வேண்டும், மின்கம்பங்கள் சாய்ந்து இருந்தாலும், பழுதடைந்து இருந்தாலும் பொதுமக்கள் சேவை மையமான மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு கரண்ட் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகாரின் பேரில், மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியில் பழுது உள்ளதா? என பார்க்க சென்றனர். அப்போது, அந்த டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதி கழட்டப்பட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 18 காப்பர் காயில் சிலிண்டர்கள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.