India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி, அகரம்சீகூர், கோவில் பாளையம், காடூர் ஆகிய பகுதிகளில் புதிதாக 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் நெல்லினை இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை, பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3000 முதல் 1 ஹெக்டருக்கு ரூ.7,500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விபரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள் ஏதவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் 29.7.24 முதல் 3.8.24 வரையிலான வாரத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கற்பகம் தெரிவித்துள்ளாா். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை சம்பந்தமான கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
TNPSC 2024-ம் ஆண்டு, TNPSC GROUP II & IIA தேர்வுக்காக 14 செப்டம்பர் 2024 தேதியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன்-28 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள மா.நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாவட்டகாவல்கண்காணிப்பு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சியாமளா தேவி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற மனு நாளில் நில பிரச்சனை, பணம் பிரச்சனை, சொத்துதகராறு போன்ற பிரச்சினைகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குன்னம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து(42). இவரது மனைவி பானுமதி (37) ஆகியோர் 2 குழந்தைகளுடன் நேற்று(25.6.24) மாலை சுமார் 6 மணியளவில் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எனவே தகுதி உடைய நபர்கள் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு ஆட்சியர் கற்பகம் நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி, இயற்கை மரண உதவிதொகை, ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு, முதியோர் ஓய்வூதியம் ஆகிவை வழங்கப்படுகின்றன. கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயனடையுமாறும் அறிவுறுத்தல்.
Sorry, no posts matched your criteria.