India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் காய்கறி மார்க்கெட்டில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், உருளைக்கிழங்கு -ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கோழி அவரை ரூ.150 முதல் ரூ.170 வரையிலும், பீன்ஸ் ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், முருங்கைக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், சின்னவெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், முள்ளங்கி ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
வயலப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று குன்னம் போலீசார் நடத்திய சோதனையில் பாண்டியன்(40), கரும்பாயிரம்(39) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில் மொத்தம் 70 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் காரை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை தனது வயலில் உள்ள கொட்டகையில் நிறுத்தி இருந்த டிராக்டர் (ம) அதனுடன் இருந்த சுழல் கலப்பையுடன் காணவில்லை என்று மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்ததில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் டிராக்டரை சூழல் கலப்பையுடன் திருடி சென்றது தெரிந்தது.
பெரம்பலூர் மாவட்ட சுற்றுப் பகுதியில், மழை பெய்தது. பெரம்பலூர் 72 மி.மீ, எறையூர் 2 மி.மீ, கிருஷ்ணாபுரம் 8 மி.மீ, வி.களத்தூர் 5 மி.மீ, தழுதாழை 35 மி.மீ, வேப்பந்தட்டை 27 மி.மீ, பாடாலூர் 8 மி.மீ, செட்டிகுளம் 63 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதன் மொத்த அளவு 220 மி.மீ மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் அறிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் 19.10.2024 அன்று நடத்தப்படவுள்ள ‘மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்’ 5-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த தகுதியுடைய இருபாலரும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீவன அபிவிருத்தி திட்டங்களின் கீழ் வேலி மசால் வளர்த்தல், காராமணி வளர்த்தல், தீவனப்புல் வளர்த்தல் ஆகியவற்றை வைத்து பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். சிறுகுறு விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெரம்பலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராஜ்குமாருடன் பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் மற்றும் கவுள்பாளையம் ஊராட்சி கவுன்சிலர் இரா.கலையரசன் நேற்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
நிலுவையிலுள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பகுதிநேர சிறப்பாசிரியா்கள் சங்கம் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாரதிதாசன், மாவட்ட மகளிா் அணிச் செயலா் வஹிதா பானு, ஒன்றியத் தலைவா் கு. தேவகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.எஸ். சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பதை கண்காணித்தல் தொடர்பாக அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று நடைபெற்றது பள்ளி (ம) கல்லூரிகளில் மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துகின்றார்களா என்பது குறித்து ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.