Perambalur

News July 17, 2024

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். பெரம்பலூரை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இம் முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இம் முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

தொழிற்பயிற்சி படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ஆம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நேரடி சேர்க்கை ஜூலை-15ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், தற்போது ஜூலை-31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல பயிற்சியாளர் நேரடி சேர்க்கைக்கான கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

காவலர்களுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி

image

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (ஜூலை-16) பெரம்பலூர் நாரணமங்கலத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் 11 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News July 16, 2024

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

image

கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பெருவிழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் அரியலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா எம்.பி, அருண்நேரு எம்.பி, மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக க.கற்பகம் பணி செய்து வந்தார். இவர் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 16, 2024

வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார் அமைச்சர்

image

கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட 14 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை சூலை-15 நேற்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார் . நிகழ்ச்சியில்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

News July 16, 2024

பெரம்பலூர் ஆட்சியரின் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் 3-வது புதன்கிழமை அன்று முகாம் நடத்தப்படும்.இம்முகாமில் ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுவர். நாளை முஹர்ரம் பண்டிகை என்பதால் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட முகாமானது நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

மாணவர்களை பாராட்டிய ஆட்சியர்

image

சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பெரம்பலூர் அ.மே.நிபள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாரீஸ் மணிகண்டன் மற்றும் குரும்பலூர் அ.மே.பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் முரளி ஆகிய இரு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முரளி மாநில அளவில் 3-ஆம் இடமும், மாரீஸ் மணிகண்டன் 5-வது இடமும் பிடித்தனர் அசத்தினர். இந்நிலையில் இருவரையும் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

error: Content is protected !!