Perambalur

News July 19, 2024

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தமிழ்நாடு வனத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கில் தேக்கு, மகாகனி, செம்மரம், கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3), ஆகியவற்றின் நகல்களுடன் 7845533752 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தமிழ்நாடு வனத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கில் தேக்கு, மகாகனி, செம்மரம், கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3), ஆகியவற்றின் நகல்களுடன் 7845533752என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

மக்களுடன் முதல்வர் முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், எளம்பலூர், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி ஆகிய கிராமங்களுக்கு 19-ஆம் தேதி வெங்கடேஸ்வரா மஹாலிலும், செங்குணம், அய்யலூர், கல்பாடி, கவுல்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு வரும்-23 ஆம் தேதி கவுல்பாளையம் அன்னை மண்டபத்திலும், லாடபுரம், மேலப்புலியூர், களரம்பட்டி கிராமங்களுக்கு 24-ஆம் தேதி மேலப்புலியூர் நாயுடு சங்க கட்டிடத்திலும் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

பெரம்பலூர்: இடியுடன் கூடிய மழை

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

மாணவர் சேர்க்கை ஜூலை.31 வரை நீட்டிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்,ஆலத்தூர்,குன்னம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை ஜூலை.15 இல் முடிந்த நிலையில் தற்போது ஜூலை.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் – 9443852306, 6379764520, ஆலத்தூர் – 9499055883, குன்னம் – 9894697154 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

பெரம்பலூர்: மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

பெரம்பலூர் கலெக்டர் இடமாற்றம்; மக்கள் அதிருப்தி

image

பெரம்பலூர் கலெக்டராக கற்பகம் கடந்த ஆண்டு பிப். மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டதுடன், பொது மக்கள் எளிதாக அணுக கூடிய வகையில் பணியாற்றி அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டு கொடுத்தார். இந்நிலையில் ஆட்சியர் கற்பகம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அம்மாவட்ட மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News July 17, 2024

ஐடிஐ சேர்க்கை தொடர்பு எண்கள் வெளியீடு

image

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை குறித்த விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055883/9499055884 எண்களிலும், பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9443852306, 9047949366, 6379764520 எண்களிலும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9894697154 எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!