India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி (ம) அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 30.6.2024 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே தகுதி உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
பெரம்பலூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் (ஜூலை -11 சிறுவாச்சூர்), (ஜூலை-16 அம்மாப்பாளையம் ) ,(ஜூலை-18 செஞ்சேரி), (ஜூலை-19 எசனை), (ஜூலை- 23 கவுள்பாளையம்), (ஜூலை-24 மேலப்புலியூர்) ஆகிய பகுதிகளில் காலை-10 மணிமுதல் மாலை-3 மணிவரை நடைபெறவுள்ளது. பகுதிகளுக்குட்பட்ட சுற்றுவட்டாரப் கிராமப் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தின் கீழ் பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் கலெக்டர் கற்பகம் மக்களோடு மக்களாக
இன்று (ஜூலை-07) நடைபயிற்சியில் பங்கேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரதாப்குமார், து. கா.கண்காணிப்பாளர் வளவன், அரசு மருத்துவர்கள் த.அரவிந்த் , சேசு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளான ஆதனூர், நத்தக்காடு அயன்பேரையூர் உட்பட 11 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்: சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் துணிச்சலான மற்றும் வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 08/07/2024 அன்று மாலைக்குள் ஆன்லைனில் பதிவுடுமாறு கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்: சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் துணிச்சலான மற்றும் வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 08/07/2024 அன்று மாலைக்குள் ஆன்லைனில் பதிவுடுமாறு கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளங்களிலிருந்து விவசாயிகள் மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்தில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தங்கள் வட்டத்திற்குட்பட்ட ஏரி குளங்களிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆலத்தூர் – 25 இடங்களில் 25.92 ஏக்கரும், பெரம்பலூர் – 16 இடங்களில் 47.16 ஏக்கரும், வேப்பந்தட்டை – 29 இடங்களில் 55.55 ஏக்கரும், வேப்பூர் -12 இடங்களில் 56.17 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 82 இடங்களில் 184.81 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட அரசு இசைப்பள்ளி புதிய மதனகோபாலபுரம் 4-வது குறுக்கு தெரு பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு 04328-275466 (ம) 9994036371 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
Sorry, no posts matched your criteria.