India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.4. 21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) மற்றும் அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் டிவிஎஸ் ஷோரூம் எதிரில் புங்க மரத்தில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இன்று
காலை தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சித்த போது சாலையில் நடந்து சென்றவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இளைஞரை காப்பாற்ற முயற்சித்த போது இளைஞர் இறந்துவிட்டார். இறந்தவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், செங்குணம் பிரிவு சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தில் வெண்பன்றி வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி வரும் அக்.17ஆம் தேதி நடைபெற இருப்பதால், இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கால்நடைத்துறை பயிற்சி மையத்தை நேரில் அணுகவும் அல்லது 9385307022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 120 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000க்கும் மேல் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமினை தகுதியுடையோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.ஷேர் பண்ணுங்க
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 120 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000க்கும் மேல் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமினை தகுதியுடையோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவுபடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா லாட்டரி சீட் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பாலக்கரையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வந்த சிவகுமார், பெருமாள் ஆகியோர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 13-10-2024 சுற்றுலாத்துறை அமைச்சர்பனைமரத்துபட்டி ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அதன் பிறகு எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள சிப்காட் காலணி தொழிற் பூங்காவில்ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். திமுக நிர்வாகிகள் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பலத்த இடியுடன் கூடிய கனமழை விட்டுவிட்டு பெயரை தொடங்கியது. இந்நிலையில் குன்னம் அருகே பெருமத்தூர் நல்லூர் பகுதியில் பிரபாவதி என்பவர் இரண்டு பசு மாடுகளையும் அருகில் உள்ள மரத்தில் கட்டிவிட்டு காட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது இடி தாக்கி இரண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.