India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின் உயர்வை கண்டித்தும், தமிழக அரசு மின் உயர்வை திரும்பப்பெற வேண்டுமென தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன் தலைமையில் இன்று
கோரிக்கை மனுவை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் கொடுத்தனர்.
இந்நிகழ்வின் போது மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காரை ஆர். சுப்ரமணியன் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கற்பகம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த கிரேஸ் வால்ரின்டிகி பச்சாவ் என்பவர் பெரம்பலூர் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை புதிய ஆட்சியர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 30ஆம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 31ஆம் தேதியும் பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. எனவே இதில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளும் படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஷ்யாம்ளா உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.07.2024 அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் மத்திய அரசு நீர் வளத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து பல்வேறு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது சார்ந்த திட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பெற்றுதர பரிந்துரை செய்கிறோம் என கூறினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் சென்னை வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி 16 ஆவது புதிய ஆட்சியராக கிரேஷ் லால்ரின் டிகி பச்சாவ் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியராக கற்பகம் பணிபுரிந்த நிலையில், ஆட்சியர் மாற்றம் செய்து தமிழக அரசின் உத்தரவிட்டது. அதன் பேரில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ் இன்று மாலை 5.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.