India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வணையம் மூலம் குரூப் 1 தேர்வில் முதல்நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 2,687 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,816 பேர் தேர்வு எழுதிய நிலையில் 871 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 2024 – 25 ஆண்டிற்கான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான சிட்டா அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருத்தகத்தினை அனுகலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி I தேர்வு இன்று (ஜூலை-13) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி மையத்தினை கலெக்டர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதி I தேர்வெழுத 2,687 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,816 நபர்கள் தேர்வெழுதினர்.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஜூலை 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொகுதி வாரியாக அ.தி.மு.க நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் 4ஆவது நாளான இன்று காலையில் சிதம்பரம், மதுரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் மதியம் பெரம்பலூர் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளித்து அதற்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகள், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம். இந்திய குடியுரிமையுடன் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், awards.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாசிக்க அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி ஷ்யாம்ளாதேவி, இணை இயக்குனர் மரு. மாரிமுத்து, குடும்ப நல இயக்குனர் மரு. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50% மானியம் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தினை பெற்று உரிய விபரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளில் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு 04328-255362, 9444064136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.